சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிற்கும், சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் நயீப்பிற்கும் இடையில் இந்த கலந்தையாடல் நேற்று ரியாத் நகரில் இடம்பெற்றதாக, அமைச்சின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட செய்தியுன் சவூதி அரேபியாவுக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கிம், இரு நாட்டு உறவுகள் குறித்த விடயங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.