யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஒருங்கே மேம்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தறை கடற்கரை பகுதியில் இன்று காலை ஆரம்பமான இராணுவ நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
6 வது இராணுவ கொண்டாட்ட நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் மாத்தறை கடற்கரை பிரதேசத்தில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் காவல்துறை மா அதிபர், முப்படைகளில் பிரதாணிகள், பாதுகாப்பு படைகளின் தலைவர், அரச பாதுகாப்பு அமைச்சர், மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.