அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் நச்சுயிரியல் ஆய்வாளருமான இவர் ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை மார்ச் 26-ம் திகதி கண்டு பிடித்தார்
நியூயார்க்கில் பிறந்த இவர் ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு 1947 ஆம் ஆண்டில் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948 இல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார். இதையடுத்து ஐந்து வருடங்க கழிய இந்த கொள்ளை நோயால் 58,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 21,269 பேர் முடக்குவாதத்திற்குள்ளாயினர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இதனால் தனது ஆய்வை தீவிரப்படுத்திய சால்க், 1952ம் ஆண்டு போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்தார். பின்னர் இதனை மேம்படுத்தி, 1953ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தார். .