சிகிச்சையின்போது மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார். மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்தும் பரிசோதித்துக்கொண்டே இருந்தனர். ஆனால் அவருக்கு வலி இருக்கவில்லை என்பது மருத்துவர்களுக்கு ஆச்சரியமாக இதுந்தது.
ஜோ கேமரூனை மருத்துவர்கள் ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். அங்கு அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு, அவரின் வலியற்ற தன்மைக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது.
இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாவது மட்டுமில்லாமல் வலி மற்றும் காயம் தொடர்பான பயம் இல்லாமல் போகிறது என கண்டறிந்தனர். மனதில் ஏற்படும் பதற்றம், பயம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஜோ கேமரூனைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.