கொரியன் படம் ஒன்றின் ரீமேக்காக உருவாகி வரும் ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் சமந்தா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். இந்த படத்தை நந்தினி ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் படமான சில காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ், சமந்தா சமந்தப்பட்ட சில காட்சிகளை மீண்டும் எடுக்கும் படி கூறியதாகவும், இதனால் டைரக்டர் நந்தினிக்கும், தயாரிப்பாளருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில். ‘படக் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதில் ரீஷூட் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமந்தா சிறப்பாக நடித்திருக்கிறார்'’ என்றார் நந்தினி.