13,718 Views
16 வயது யுவதியொருவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரின் ஊடாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் வாத்துவை , மொல்லிகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் , 16 வயது யுவதி மற்றும் அவர்கள் வசமிருந்த போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொல்லிகொட ஆயுர்வேத வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 16 வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் குறித்த நபர் மற்றும் அவர் தன்னுடாக செய்யும் வியாபாரம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே அந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் தானும் , அந்நபரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.
வீட்டின் அருகே போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதன்போது 30 பெக்கட் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றை தாம் 500- 1000 ரூபா வரை விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.