வெலே சுதாவுக்கும் விநியோகம் செய்துள்ளார்.
இலங்கையில் இயங்கிவருவதாகக் கூறப்படும் மிகப் பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேகநபரும் , மலேசியாவை வசிப்பிடமாகக் கொண்டவருமான மொஹமட் முபாரக் மொஹமட் முஜஹிடீன் என்பவரை கைதுசெய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது.
அவரை கைதுசெய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2009 முதல் 2014 ஜூலை 7 ஆம் திகதி வரை இவர் போதைப் பொருள் அடங்கிய சுமார் 7 கொள்கலன்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அக் கொள்கலன்களுக்குள் இருந்து சுமார் 750 கிலோவுக்கும் அதிகம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகவர் ஒருவர் மூலமாகவே இவர் தனது சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். அம்முகவர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணைகளில் இருந்தே மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜஹிடீன் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'செல்வம்' மற்றும் சிங்களத் திரைப்படமொன்றின் தயாரிப்பிலும் பங்களிப்புச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.