ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வேறுதரப்பினரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்,ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது மகிழ்ச்சியை தருகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்பின்னர், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அலரிமாளிகையில் இருந்து வெளியேறியதுடன், சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியையும் ஜனாதிபதியிடம் தமது தீர்மானத்தின் அடிப்படையிலேயே வழங்கியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 9ஆம் திகதி பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதை போன்று 2015 பொதுத்தேர்தலில் மக்களின் கருத்துக்கு ஜனாதிபதி மதிப்பளிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச தமது கடிதத்தில் கோரியுள்ளார்