1,025 Views
அதுவும் எளிதாக வீட்டில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்தே இதனை செய்யலாம். பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு தான் முகத்தில் எண்ணெய் வழிந்துகொண்டிருக்கும் . இருப்பினும் இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும்.
தினமும் ஐந்து முறை முகத்தை கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை தன்மை மறைந்துவிடும். அல்லது குளித்த பிறகு சிறிதளவு கடலை மாவில் சிறிதளவு றோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினாலும் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.
அதேபோல ஆண்கள் தங்களது தலை முடிக்கு பயன்படுத்தும் ஷாம்பில் அதிகளவு விற்றமின் 'ஈ' சத்து நிறைந்துள்ள ஷாம்பூவினை பயன்படுத்தினால் முடி உதிர்வு பிரச்சினை சரியாகும். அதுமட்டுமன்றி தலைமுடி வேர்களுக்கு அதிக வலுவினையும் சேர்க்கும்.
முடியானது கருமையாகவும் இருக்கும். அதேபோல சிலருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கும். அதன்காரணமாக அவர்களின் உதடு அடர்ந்த கருமை நிறத்தில் இருக்கும். அப்படியானவர்கள் ஒரு பீட்ருட் துண்டினை எடுத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து உதட்டில் சில நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமையான நிறத்தில் இருக்கும் உதடு றோஸ் நிறத்திற்கு மாறும். அல்லது தினமும் பல் துலக்கிய பின் அதே தூரிகையை கொண்டு உதட்டில் சிறிது நேரம் மசாஜ் செய்தால் உதட்டில் இருக்கும் வெடிப்பு மற்றும் கருமை நிறம் மாறும்.
எனவே ஆண்கள் மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வந்தால் தங்களின் அழகை பேணிக்கொள்ளலாம்.