Bloomendal shooting : all suspects nabbed - புளுமெண்டால் துப்பாக்கிச் சூடு: பொலிஸ் பேச்சாளர் வெளியிட்ட பெயர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,374 Views
புளுமெண்டால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை புளுமண்டால் வீதியில் கடந்த ஜூலை 31ஆம் திகதி, அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதில் இருவர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விளக்கமறியலில் உள்ள தெமட்டகொட சமிந்த என்பவரே இதனை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல பெயர்கலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டார். அவர் கூறுவதைக் கேளுங்கள்.