Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
முப்பது இலட்சம் மக்­க­ளுக்கு காணி மற்றும் வீட்டு உரி­மை, 500,000 புதிய வீடுகள்: ரணில்

PM on housing and development - முப்பது இலட்சம் மக்­க­ளுக்கு காணி மற்றும் வீட்டு உரி­மை, 500,000 புதிய வீடுகள்: ரணில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,598 Views
10 வருடங்கள் அரச உரிமை வீடுகளில் வசிக்கும் 30 லட்சம் பேருக்கு அவற்றின் நிரந்தர உறுதி பத்திரம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இடைக்கால கொள்கை பிரகடன விஷேட உரையை நேற்று நாடாளுமன்றில் நிகழ்த்திய அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இணைத்து தேசிய ஓய்வூதிய நலன்புரி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதனிடையே, நூல்கள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் உரையின் சாராம்சம்:

"எமது அபி­வி­ருத்தி இலக்­கு­களை வெற்­றி­கொள்­வ­தற்­காக நாம் பல்­வேறு முன்­னேற்­ ற­க­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு எதிர்பார்க்­கின்றோம். இடைக்­கால அரச நிதி ஒன்­றி­ணைப்­பி­னூ­டாக வரவு செலவு திட்ட துண்­டு­விழும் தொகையை மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியின் 3.5 வீதம் வரை குறைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இந்த இலக்கை 2020 ஆம் ஆண்­டாகும் போது பூர்த்தி செய்­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

நிதி­ய­மைச்சின் சிரேஷ்ட கவனம், அரச வரு­மா­னத்தை அதி­க­ரித்தல், மீண்டு வரும் செல­வினம் மற்றும் மூல­தன செல­வி­னத்தை திட்­ட­மிடல் மற்றும் கட்­டுப்­ப­டுத்தல் மீது கவனம் செலுத்­தப்­படும்.

ஆரம்ப நட­வ­டிக்­கை­யாக எமது மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­துவோம். சுமார் 30 இலட்சம் மக்­க­ளுக்கு காணி மற்றும் வீட்டு உரி­மையை பெற்றுக் கொடுப்போம். காணி அபி­வி­ருத்தி கட்­டளைச் சட்­டத்­திற்கு அமைய மக்­க­ளுக்கு உறு­திப்­பத்­திர முறை­யொன்றின் அடிப்­ப­டையில் காணி பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

10 வரு­டங்­க­ளுக்கு மேலாக அனு­ம­திப்­பத்­திரம் பெற்ற காணி­களில் வாழும் சக­ல­ருக்கும் நாம் காணி உரி­மையைப் பெற்­றுக்­கொ­டுப்போம். அர­சாங்­கத்தின் வாடகை வீடு­களில் 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக குடி­யி­ருப்­போ­ருக்கு அந்த வீடு­களின் உரிமை முழு­மை­யாக பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். தோட்­டங்­களில் லயன் அறை­களில் 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக வாழும் தொழி­லா­ளர்­க­ளுக்கு சிறிய காணி­யுடன் வீட்டு உரிமை பெற்­றுக்­கொ­டுக்க நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

கிரா­மிய வீட்­டுத்­திட்­டங்கள் பலவும் எம்மால் ஆரம்­பிக்­கப்­படும்.
5 வருட காலத்­திற்குள் கிரா­மிய, சிறிய நக­ரங்கள் மற்றும் நகர்ப்­பி­ர­தே­சங்­களின் வீட்­டுப்­பி­ரச்­ச­னை­க­ளுக்கு முற்­று­மு­ழு­தாக தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­படும், இத­ன­டிப்­ப­டையில் 500,000 புதிய வீடு­களை அமைப்­ப­தற்கு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­துவோம்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top