அட்லி இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கொட்டும் மழையில் நடைபெற்றது.
படத்தில் ஒரு காட்சியில் கொட்டும் மழைக் காட்சி ஒன்று வருகிறதாம். அதற்காக நிஜ மழையிலேயே அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.
நிஜமான மழைக் காட்சி என்பதால் அது படத்திலும் இயல்பாக வரும் என்பதால் விஜய்யும் மழையில் நடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு இன்று காலையிலேயே ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. சில மணி நேரங்களுக்கு அந்தக் காட்சி படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தீபாவளிக்கே இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், எந்த டைட்டில் வைப்பது என்பதில் இன்னும் குழப்பம் நீடிப்பதாகவே தெரிகிறது.
எப்படியும் இந்த மாதத்திற்குள் டைட்டில் அறிவிக்கப்பட்டுவிடும் என படக் குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மழைக் காட்சிகளும், வெள்ளக் காட்சிகளும் படங்களில் தேவைப்படுபவர்கள் தற்போது வேறு எங்கும் செல்லாமல் சென்னைக்கு வந்தால் பல காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு சென்னை மழை நீரால் நிரம்பி வழிகிறது.