ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகவுள்ள கத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளமை தெரிந்த விடயம். கத்தி டிரெய்லரை எமது இணையத்தளத்திலும் நாம் தந்திருந்தோம்.
படம் வெளியாக இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் விஜய் பேசும் ' பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை வரைக்கும் எல்லாம் கிராமத்திலிருந்து வரணும், ஆனா ஒரு கிராமத்தான் செத்தா மட்டும் மூக்க மூடுவாங்களா? இப்ப வர வைக்கிறேன் பாரு அத்தனை செனல்களையும்' எனும் முத்திரை வசனம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.
ஒரு சில மணிநேரங்களில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர், கத்தி டிரெய்லர் பார்த்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வழக்கமாக விஜய் படங்கள் வெளியாகும் நேரம் நடக்கும் சமூக வலைத்தள மோதல்கள் போட்டிக் கிண்டல்கள், கலாய்த்தல்களும் ஆரம்பித்துள்ளன.
அஞ்சான் இயக்குனர் லிங்குசாமியின் பேட்டிக்கான எதிர்வினை போலவே 'கத்தி' ட்ரெயிலர் பற்றிய கிண்டல் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.
சினிமா உலகில் இது சகஜம் தானே.
கோடம்பாக்க சினி செய்திகளை தொகுத்து வழங்கியது
ர. பிரவீனா