Rail delay causes chaos - புகையிரத வண்டியின் சாரதி குடிபோதையில்? : குழப்ப நிலைக்கு காரணம் இதுவா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,797 Views
நேற்று மாலை 6.35 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பயணித்த புகையிரத வண்டியின் சாரதி மது அருந்திய நிலையில் காணப்பட்டதாக பயணிகள் மேற்கொண்ட குற்றச்சாட்டை புகையிரத சாரதிகள் குழு ஒன்று நிராகரித்துள்ளது. குறித்த சம்பவத்தின் போது சாரதி சுகயீனமுற்று இருந்ததாக ஹிரு செய்திப்பிரிவை தொடர்பு கொண்ட அந்த குழு தெரிவித்திருந்தது.
எனினும் இது உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல என அவர்கள் சுட்டீக்காட்டினர்.
செய்தியின் முழு விபரம் வருமாறு:
நேற்று மாலை கொழும்பிலிருந்து , றம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று ராகமை ரயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புகையிரத ஓட்டுநர் குடிபோதையில் இருந்தமையாலேயே இந்நிலை ஏற்பட்டதாக ரயிலில் இருந்த பயணிக்கள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தனர்.
எனினும் ஓட்டுநர் திடீர் சுகயீனமுற்றமையே புகையிரதம் நிறுத்தப்பட காரணமென ரயில்வே கட்டுப்பாட்டறை பேச்சாளரொருவர் எமக்கு தெரிவித்தார்.
இதேவேளை ஓட்டுநர் போதையில் இருந்ததாக பயணிகள் செய்த முறைப்பாட்டையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த புகையிரதத்தால் , மேலும் பல புகையிரதங்களின் பயணங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் வேறொரு சாரதியின் உதவியுடன் புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்ததாக தெரியவருகின்றது.