20,926 Views
300 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 600 பேருடன் ஸ்பானிய வணிக கப்பல் ஒன்று கரீபியன் கடலில் மூழ்கியுள்ளது.
இந்த கப்பலில் பல ஆயிரம் கோடி பெறுமதியான தங்க க் காசுகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது வரை மர்ம மாகவே இருந்த இக்கப்பல் மூழ்கிய இட த்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலம்பிய ஜனாதிபதி ஜுஹான் மெனுவெல் சாண்டோஸ் தெரிவித்துள்ளார்.
கப்பல் இருக்கும் ஆழ்கடல் பகுதிக்கு இதுவரை எவரும் செல்லவில்லை எனவும் ஆனால் சர்வதேச நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளதாகவும் சாண்டோஸ் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் இரகசியமென்பதால் இருக்கும் இட த்தை எவருக்கு சொல்லப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள கொலம்பிய ஜனாதிபதி அவ்விட த்துக்கு அனுப்ப ப்பட்ட தானியங்கி ஆழ்கடல் இயந்திரங்கள் கப்பலைக் கண்டுபிடித்துள்ளதுடன் படங்களையும் பிடித்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1708–ம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே நடந்த போரின் போது ஸ்பெயின் கான்ஜோஸ் என்ற கப்பலில் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பத்திரமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளது
ஆனால் அக்கப்பல் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. அக்கப்பலை கண்டு பிடிப்பதில் கொலம்பியா தீவிரமாக ஈடுபட்டிருந்த து. 1980–ம் ஆண்டுகளில் சிதைந்த கப்பல் மூழ்கி கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கப்பலில் இருக்கும் தங்கத்தின் பெறுமதி 17 பில்லியன் அமெரிக்க டொலர்களென தெரிவிக்கப்படுகின்றது. தங்கம் மட்டுமன்றி வைரம் மற்றும் வெள்ளியும் அதில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் 1981 ஆம் ஆண்டு குறித்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்ட து . மேலும் 2011 ஆம் ஆண்டு இக்கப்பல் கொலம்பியாவுக்கே சொந்தமென அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.