அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸாலும், 212 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், அவுஸ்திரேலியா 583 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி, துடுப்பாடும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகளுக்கு வழங்கியது.
இதன்படி முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள், ஃபொலோ ஓன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்து 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் அவுஸ்திரேலிய 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதேவேளை நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடுகிறது.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது நியுசிலாந்து ஒரு விக்கட்டை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் நியுசிலாந்து 431 ஓட்டங்களையும், இலங்கை 294 ஓட்டங்களையும் பெற்றிருந்தன