26,654 Views
அவுஸ்திரேலியாவின், சிட்னி ஹெரிஸ்பார்க் ரயில் நிலையத்தில் , பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதன்போது அவர் தனது குழந்தையுடனேயே ரயில் முன் பாய்ந்துள்ளார்.
அர்ச்சனா குன்னத் என்ற 30 வயது மலையாளப்பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை தனது 3 வயதுக் குழந்தையுடன் ரயிலின் முன் பாய்ந்ததில் அவர் மரணமடைந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த குழந்தைஆபத்தான நிலையில் மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.