Tsunami in Sri Lanka - இரண்டு இலட்ச உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு 11 வருடங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,910 Views
இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளில் லட்ச கணக்கான உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினத்திற்கு ஒத்ததாக நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆழிப்பேரலை ஞாபகார்த்த நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவிற்கு அருகாமையில் 9.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இதனையடுத்து, 14 நாடுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டது.
இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த ஆழிப்பேரலை காரணமாக 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
இதில் இலங்கையை சேர்ந்த 35 ஆயிரத்து 322 பேர் அடங்குகின்றனர்.
ஆழிப்பேரலை காரணமாக உயிர்நீத்தவர்களுக்கு இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரையான 2 நிமிட கால பகுதியில் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பொது மக்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.