45 Views
முகப்பருக்கள் மறைந்தாலும், அவைகள் விட்டுச் செல்லும் கருமையான தழும்புகள் பலரின் அழகைக் கெடுக்கும். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முறையைப் பின்தொடரலாம்.
புதினா இலை விழுது (2 தேக்கரண்டி), கஸ்தூரி மஞ்சள் தூள் (சிறிது), எலுமிச்சை சாறு (சில துளிகள்)
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து Paste போல தயார் செய்யவும். முகத்தில் தழும்புகள் உள்ள இடங்களில் அல்லது முழு முகத்திலும் தடவி 15 நிமிடங்கள் காயவிடவும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும்.
சிலருக்கு முகம் மிருதுவாக இருந்தாலும், மூக்குப் பகுதி மட்டும் சொரசொரப்பாக இருக்கும்.
புதினா சாறு (1 தேக்கரண்டி), அரிசி மா (1 தேக்கரண்டி), தேன் (அரை தேக்கரண்டி).
இவற்றை ஒன்றாகக் கலந்து, மூக்குப் பகுதி மற்றும் தாடையில் வட்ட வடிவில் மென்மையாக 3 முதல் 5 நிமிடங்கள் Scrap செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
அரிசி மா இறந்த செல்களை நீக்கும் .
புதினா மற்றும் தேன் இணைந்து மூக்கின் சொரசொரப்புத் தன்மையை மாற்றி பட்டுப்போன்ற மிருதுவான சருமத்தைத் தரும்.
வெயிலில் அலைந்துவிட்டு வரும்போது முகத்திற்கு உடனடிப் புத்துணர்ச்சி தர இந்த இயற்கை முறை உதவும்.
புதினா இலைகள் ஒரு கைப்பிடி, பன்னீர்.
புதினா இலைகளைச் சிறிதளவு தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டவும். ஆறிய பிறகு அதனுடன் பன்னீர் சேர்த்து அதனை போத்தலில் சேமித்து அதனை குளிரூட்டியில் சிறிது நேரம் வைக்கவும்.
முகம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் இதை ஸ்பிரே செய்தால், சருமம் குளிர்ச்சியடைவதுடன், திறந்த துவாரங்கள் இறுக்கமடைந்து முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.