Early Morning accident - அதிகாலை வேளை விபத்தில் பலியான 5 உயிர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,182 Views
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல - தும்மலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 பேர் பலியானதாக, உதவி காவல்துறை அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 3 பெண்கள் மற்றும் 1 குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனியார் பேரூந்து ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தின் போது சிற்றூர்ந்தில் பயணித்த 5 பேரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.