நீண்ட நாட்கள் மனஅழுத்தத்தில் இருப்பது உடலில் cortisol என்ற ஹோர்மோனின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து, அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
காயங்கள் ஆறுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதும்,சிலருக்கு சமிபாட்டுக் கோளாறு, தலைவலி, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
மனஅழுத்தத்தை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், அதை சரியாகக் கையாள்வது மிகவும் முக்கியம். தினமும் 7–9 மணி நேரம் தூங்குவது, சத்தான உணவை உண்பது,வழக்கமான உடற்பயிற்சி செய்வது, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது போன்ற பழக்கங்கள் மனஅழுத்தத்தைக் குறைத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்க உதவும். தொடர்ச்சியாக அதிக மனஅழுத்தம் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.