காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருப்பதுண்டு. ஆனால், மருத்துவ ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பார்க்கும்போது இது தீங்கு விளைவிப்பதில்லை. மாறாக, பல நன்மைகளையே தருவதாக மருத்துவ நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
முக்கிய நன்மைகள்:
நோய் எதிர்ப்புச் சக்தி: படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது வாயில் இருக்கும் உமிழ்நீர் (Saliva) நன்மை செய்யும் பக்டீரியாக்களைக் கொண்டது. இது வயிற்றுக்குள் செல்லும்போது நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கிறது.
சிறந்த சமிபாடு: வெறும் வயிற்றில் நீர் குடிப்பது குடலைச் சுத்தப்படுத்தி, சமிபாட்டுத்தொகுதியை தூண்டுகிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
உடனடி புத்துணர்ச்சி: இரவு முழுவதும் இழந்த நீர்ச்சத்தை (Hydration) உடல் மீண்டும் பெற உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி, சருமம் பொலிவு பெறுகிறது.
இன்னுமொரு முக்கிய குறிப்பாக வெதுவெதுப்பான நீரைக் குடித்துவிட்டு, 15 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு பல் துலக்குவது மிகவும் நல்லது எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.