இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்றைய தினம் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தேவ்தத் படிக்கலின் கன்னி சதத்துடன் 288 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பலமான நிலையுடன் தனது முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்திருந்தது.
இலங்கை அணி சார்பில் அசித பெர்னான்டோ மற்றும் லகிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.
இன்று காலை ஆரம்பமாகவிருந்த இரண்டாம் நாள் ஆட்டமானது தொடர்ச்சியாக காலி மைதானத்தில் பெய்து வந்த மழையினால் தாமதமாகிய நிலையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதனடிப்படையில், இந்திய அணி சற்று முன்னர் வரை அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 414 ஓட்டங்களைப் பெற்று(414/6) தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.