இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுங்க திணைக்களத்தினரையும் அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் அசங்க வெலகெதர, எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அண்மையில் இரத்தினபுரி பகுதியில் 281 கிராம் நிறைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த நீலக்கல்லின் பெறுமதியை நிர்ணயிக்க முடியாதுள்ளதாக, அதனை ஆய்வுசெய்த கொழும்பு இரத்தினக்கல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் அதன் உரிமையாளரான இலங்கையர், அதனை 4 ஆயிரத்து இருநூறு கோடிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அவர் அதற்கு "இலங்கையின் ஆதாம் நட்சத்திரம்" என பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இரத்தினக்கற்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.