செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு துறைகளில் ஏராளமானோர் பயன் பெற்று வருகிறார்கள். இருப்பினும், இந்த AI தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மிகப்பெரும் அபாயகரமானதாக இருக்குமென்று பல தொழில்நுட்ப ஆய்வாளர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், AI காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் மனித இனம் மொத்தமாக அழிய 10%இற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக Anthropic நிறுவனத்தின் Alignment Science பிரிவுத் தலைவர் இவான் ஹூபிங்கர் பரபரப்புப் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் அந்தப் பதிவில் அவர்; தற்போது உள்ள AI மொடல்களால் உடனடி ஆபத்து குறைவாக இருந்தாலும், சுயமாகவே தங்களை அதிவேகமாக மேம்படுத்திக் கொள்ளும் Super Intelligence அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் முறையான திட்டம் தங்களிடம் இன்னும் இல்லை என்றும், அது நினைத்ததை விட வேகமாக வளர்ந்து வருவதாகவும் இவான் ஹூபிங்கர் தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பம் பற்றிய இவரது பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிதும் கவனம் பெற்று வருகிறது.