துபாயில் பெண்கள் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் குழு A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் , ஐக்கிய அரபு அமீரகம்,இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றன.
நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் ,ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. பங்களாதேஷ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் பங்களாதேஷ் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோத உள்ளன.