3,970 Views
இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 12 ம் திகதி வெளியாக இருக்கிறது .இதில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் .தனி ஒருவன் படத்தில் மித்திரன் ஐ .பி .எஸ் ஆக நடித்தார் ஜெயம்ரவி .மிருதன் படத்தில் டிராபிக் போலீஸ் ஆக நடித்திருக்கிறார் .
இந்த படத்தின் போஸ்டரில் traffic போலிசாக நடிக்கும் ஜெயம் ரவியின் கையில் துப்பாக்கி வைத்திருப்பதை போன்று ஒரு புகை படம் இடம் பெற்றிருக்கின்றது .இதை பார்த்த ரசிகர்கள் மத்தியில் traffic போலீஸ் கையில் துப்பாக்கியா என்ற கிண்டலும் படத்துக்கான எதிர்பார்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளதாம் .
இது இப்படி இருக்க சமீபத்தில் வெளியான் பூலோகம் படத்தை பார்த்து விட்டு .ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி தனது கணவரை பாராட்டிவாழ்த்தி இருக்கிறாராம் .ஏதோ நடித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் .ஆனால் இந்த அளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை .நீங்கள் நடிச்ச படங்களில் இந்த படம்தான் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என கூறினாராம் .
இதை கேட்ட ரவி இன்ப அதிர்ச்சியில் இருக்கிறாராம்.அவரது அடுத்த படமான மிருதன் எப்படி அவருக்கு அமைய போகிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம் .