ஜீவாவின் அண்மைய படங்கள் எதிர்பார்த்தளவுக்கு கை கொடுக்காததால், கொஞ்சம் கவலை அப்ப உலாவிய நடிகர் ஜீவா, மீண்டும் புத்துணர்வோடு எழுந்துள்ளார்.
தனது அடுத்தபடம் எப்படியும் வெற்றிப்படமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில், மிகவும் அவதானமாக கதைகளை தேர்வு செய்துகொண்டு வந்தார். அதன்படி இயக்குனர் அட்லீயின் உதவியாளர் கொண்டு வந்த கதையை தனது அடுத்த படத்துக்காக தெரிவு செய்துள்ளார் ஜீவா.
கதை அட்லீயால் எழுதப்படாது என்றாலும் , அவரது உதவியாளர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா இப்படத்தில் இணைகின்றனர்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-