இவரெல்லாம் நடிச்சு என்ன பண்ணப் போறார் என்கின்ற பேச்சுக்களை, உடைத்து புதிய அத்தியாயத்தையே உருவாக்கிக் காட்டிய நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் விஜய சேதுபதி. இவரது அடர் தாடிக்கும், அசத்தும் பார்வைக்கும் மனதை பறி கொடுக்காத இரசிகர்களே இருக்க முடியாது. அவ்வளவு நெருக்கமான முகம். அதாவது நம்ம ஊர்ல உள்ள பையன் போல ஒரு தோற்றத் தெரிவு இவரிடமுள்ளது.
தனக்கு ஒத்துப் போகும் படங்களில் மட்டுமே ஒப்பந்தமாகி, பேராசையில்லாமல் பெருந் தன்மையோடு நடந்து கொள்ளும் ஒரு நல்ல நடிகர் இவர் எனலாம். இப்பொழுது நடிகர் தனுஷ் தயாரிப்பில் நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்குப் பின்னர், அருண்குமாரோடு இணைந்து இன்னொரு படத்திலும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இப்படத்தில் போலீஸ் பாத்திரம் ஏற்கிறார் விஜய சேதுபதி.
இந்தப் படங்கள் வருவதற்கு முன்னமே, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன என்பதும் முக்கியமானது.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-