அமரகாவியம் திரைப்படத்தின் பின்னர் "இன்று நேற்று நாளை"திரைப்படத்தில் நடிகர் விஷ்ணுவுடன் இணைந்து நெஞ்சங்களை கட்டி போட்ட மியா மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் இணைவில் "ஒரு நாள் கூத்து"என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு, இம்மாதம் 30 ம் திகதி சென்னையில் ஆரம்பமாகின்றது.
முதல் தடவையாக நெல்சன் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்க, "பண்ணையாரும் பத்மினியும்"படத்துக்கு இசை வழங்கிய ஜஸ்டின் இசை மழை பொழிய தாயாரகின்றார். மியா வுக்கு கிராமத்து பெண் வேடம் கிடைத்திருகின்றது. மண் வாசம் வீசும் கதைக் கருவை ஒரு நாள் கூத்து கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே எல்லா படப்பிடிப்பையும் நடாத்தி முடிக்கவும் தீர்மானித்துள்ளதாக கூறபடுகின்றது.
-ஊர்கூடி-