தேசிய விருதை பெற்றுக் கொண்டாலும், நீண்ட நாட்களாக வாய்ப்புக்கள் இல்லாமல் அங்கும் இங்குமாக தலைகாட்டி வந்தார் நடிகை ப்ரியாமணி. திறமையான நடிக்கத் தெரிந்த அழகிய நடிகையாக இவர் இருந்தும், ஏனோ வாய்ப்புக்கள் தமிழில் அதிகமாக அமையவில்லை. இரசிகர்களோடு சேர்த்து நமக்கும் ப்ரியாமணியை தமிழ் சினிமாவில் காணாதது கவலைதான்!
இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இதில், இயக்குனர் தங்கமீன்கள் ராம் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியாமணி நடிக்கிறார். இவர்கள் இருவருக்குமிடையில் ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? இருவருமே தேசிய விருது பெற்ற கலைஞர்கள். நடிப்பில் அனைவரையும் உருக வைக்க முடிந்தவர்கள்.
எனவே, இந்தப் படத்தில் இந்த இரண்டு நல்ல கலைஞர்களும் மிஸ்கினோடு இணைந்து படைக்கவிருக்கும் இப்படத்தை, ஆர்வமாக அனைவரும் நோக்க ஆரம்பித்துள்ளார்கள். அத்தோடு, இந்தப் படத்தில் கதையை மிஸ்கின் எழுவது மாத்திரமில்லாமல், தானே வில்லனாகவும் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் சிறப்பானது.
-கோடம்பாக்கக் குருவி-