அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’.
இந்தத் திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹொரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்தத் திரைப்படம் இரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி உள்ளது. இத்திரைப்படமானது JUNE மாத இறுதியில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.