ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் Royal Challengers Bengaluru, Gujarat Titans, Sunrisers Hyderabad மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகள் Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று, இறுதியாக Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் தலைவர் ரியான் பராக் கருத்து தெரிவித்துள்ளார்.
”நாங்கள் போட்டியை வென்று Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டோம். ஆனால் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயற்பட வேண்டிய பல பகுதிகள் உள்ளன. உண்மையில் இந்தத் தொடரில் பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளேன். அப்படித்தான் நான் வழிநடத்த விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் "தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறோம். எங்கள் தவறுகள் அனைத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் செயற்படுவோம் என்று நம்புகிறோம்.” எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.