IPL தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் அணியாக Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து நேற்றைய போட்டியில் பெங்களுரு அணியின் தலைவராக செயற்பட்ட ஜிதேஷ் சர்மா போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"துடுப்பாட்டத்திலும் சரி, பந்துவீச்சிலும் சரி, நாங்கள் போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். நாங்கள் அழுத்தத்தில் இல்லை. ஆடுகளத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் அணியின் தாரக மந்திரம் மிகவும் எளிமையானது. இன்றைய போட்டியில் கவனம் செலுத்துவதுதான் அது. நாங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியோ சிந்திப்பதில்லை. ஒவ்வொரு போட்டியிலும் எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம், அவ்வளவுதான்.” என அவர் கூறியுள்ளார்.