இலங்கை உள்ளூர் கழகங்கள் இரண்டுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற போட்டியொன்று சர்வதேச கவனத்தினை ஈர்த்துள்ளது.
காலி கிரிக்கெட் கழகம் மற்றும் இலங்கை விமானப் படை விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான முக்கியத்துவம் வாய்ந்த போட்டியே அது.
இந்தப் போட்டியில் தோற்றால் அடுத்த வருடம் பிரிவு ரீதியாக தரக்குறைவை சந்திக்கவிருந்த அபாயத்தோடு தான் காலி கழகம் விளையாடியிருந்தது.
குறித்த போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழக அணி 15.1 ஓவர்களைல் 31 ஓட்டங்களுக்கு சகல ஓட்டங்களையும் இழந்தது.
இவ் ஓட்ட எண்ணிக்கையானது 1924 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதற்தர போட்டியொன்றில் வெற்றிபெற்ற அணியொன்று தனது முதல் இங்னிங்ஸில் பெற்ற ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
விமானப் படை விளையாட்டுக் கழக அணி சார்பில் ஆசிரி கருணாரத்ன 21 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்ங்கிஸில் துடுப்பெடுத்தாடிய விமானப் படை அணி 215 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி அவ்வணி 184 ஓட்டங்களால் முன்னிலை பெற்றதுடன் வெற்றி வாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டது.
எனினும் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழக அணி இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியின் வீரரான சரித் அசலங்கவின் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து யாரும் எதிர்பாராத வகையில் 295 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி விமானப் படை விளையாட்டுக் கழக அணிக்கு 112 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
எனினும் விமானப் படை 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 4 ஓட்டங்களால் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது.
இந்த 4 ஓட்ட வெற்றி மாபெரும் ஆச்சரியத்தை சர்வதேச கிரிக்கெட் உலகில் ஏற்படுத்தியுள்ளது.