பிரபல ஹிந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டரில் ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு . கோச்சடையான் வெளிவந்த நேரம் தனது டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த்தின் மார்பு பற்றி கிண்டல் செய்யப்போய் பெரிய சர்ச்சையில் மாட்டியிருந்தார்.
ரஜினியின் மார்பு - சர்ச்சையில் ராம் கோபால் வர்மாராம்கோபால்வர்மாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்கும் நாளில் பாகிஸ்தான் சிறையில் இருந்த மீனவர்களும், இலங்கை சிறையில் இருந்த மீனவர்களும் விடுவிக்கப்பட்டது குறித்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பதிவு வெளியிட்டு உள்ளார்.
அதில்,மீனவர்கள் ரிலீஸ் ஆனதில் தனக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை. ஏனேனில் அவர்களால் ஆயிரக்கணக்கான மீன்கள் தங்கள் உயிரை இழக்க இருக்கின்றன. என்று எழுதியுள்ளார்.
மேலும் மற்றொரு ட்விட்டில் ‘சோனியாவின் மகள் பிரியங்காவை விட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் கவர்ச்சியானவர் என்று எழுதியுள்ளார்.
பிரியங்கா காந்தி
மரியம் நவாஸ் ஷெரிப்
இப்போதே இதற்கான எதிர்வினைகள் ட்விட்டர் பக்கங்களில் கிளம்பியிருக்கின்றன.
யார் யார் இனி சட்ட ரீதியில் வம்பிழுக்கப் போகிறார்களோ?
ராம் கோபால் கொஞ்சம் கவனமாகத் தான் இனி இருக்கவேண்டும்.