எப்போதுமே இரவில் நன்றாக தூங்கினால் தான் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். ஆனால் தற்காலத்தில் பலரும் பின்பற்றும் நவீன மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்றவை காரணமாக பலரும் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குவதில்லை.
இரவில் தூங்குவதற்கு முன் சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாக்லேட்களில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் அஜீரணம் மற்றும் அமில எதுக்களிப்புக்கு வழிவகுக்கும். அதிக காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் குறிப்பாக சீஸ் கலந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இரவில் தூங்குவதற்கு முன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஐஸ்கிரீம் இரவு தூக்கத்தைத் தொந்தரவு செய்கிறது. இதற்கு காரணம் அதில் இருக்கும் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ளடக்கமே, இவை இரத்த சர்க்கரை அளவில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது