தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை இயக்குநர் மற்றும் நடிகர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன்.
இயக்குநராக அறிமுகமான அவர், பின்னர் நடிகராகவும் தொடர்ச்சியாக வெற்றி படங்களை வழங்கி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
2019 ம் ஆண்டு வெளியான 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து, 'லவ் டுடே' திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றிபெற்று, பிரதீப் ரங்கநாதனை முன்னணி இளம் நட்சத்திரமாக உயர்த்தியது.
இந்த நிலையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவதுடன், அதில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.