பாடசாலை மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை பாடசாலை செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்த பாடசாலை மாணவி, இளைஞர் ஒருவருடன் சென்றுள்ள சம்பவம் பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
15 வயதான குறித்த பாடசாலை மாணவி, இளைஞருடன் சென்று மீண்டும் பாடசாலை முடியும் நேரத்தில் திரும்பி வந்துள்ளார்.
இதன்போது இருவரையும் அவதானித்த பிரதேசவாசிகள், இளைஞரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
பாடசாலை மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறி 25 வயதான அந்த இளைஞனை பிரதேசவாசிகள் காவல்துறையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் பாழடைந்த வீடோன்றில் 5 மணிநேரம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த மாணவி தனது விருப்பத்துடனேயே இளைஞருடன் சென்றதாக காவல்துறையில் கூறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருவளை காவல்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.