5,778 Views
2,294 Views
21,500 Views
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான திரைப்படங்களை அளிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் ‘இக்னைட் பிக்சர்ஸ்’ நிறுவனத்தாரின் முதல் படைப்பு ‘டொலர் தேசம்.’
அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது ‘டொலர் தேசம்’.
பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.
சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு.
நவீன திரைக்கதை உத்தியோடு சொல்லபட்டிருக்கும் இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.
‘பருத்தி வீரன்’, ‘யோகி’ படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக அவதாரம் எடுத்து அறிமுகமாகிறார்.
பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றிய பிரசாத் வி.குமார் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மற்றும் ‘மூடர்கூடம்’ படங்களில் பணியாற்றிய அத்தியப்பன் சிவா, படத்தொகுப்பை கையாள்கிறார். பாடல்கள் சினேகன். படத்திற்கு வசனம் – சுந்தர் மற்றும் இந்திரஜித்.
மேலும் பல தொழில் நுட்பக் கலைஞர்கள் பணிபுரியும் இத்திரைப்படம் வெகுவிரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2,198 Views
6,012 Views
12,714 Views
3,633 Views
6,018 Views
இந்தியாவின் கேரளாவை சேர்ந்தவர் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர். இவர் கேரள மற்றும் தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சூரியவெப்ப தகடுகளை பொருத்தி தருவதாக பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சரிதாநாயர் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் சரிதா நாயர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது எழுதியதாக கூறி ஒரு கடிதம் கேரளாவில் வெளியானது. அதில் கேரள நிதி மந்திரி மாணியின் மகனும் எம்.பி.யுமான ஜோஸ் கே.மாணியும் சரிதாநாயரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை சரிதாநாயரும், ஜோஸ் கே.மாணியும் மறுத்தனர்.
இந்த பிரச்சினை பற்றி திருவனந்தபுரத்தில் சரிதா நாயர் நிருபர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இதன்போது அவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். சரிதா நாயர் கூறியதாவது:–
"என்னை மிரட்டியவர்கள், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர்கள் பற்றி சிறையில் இருந்த போது நான் கடிதம் எழுதியது உண்மைதான். ஆனால் தற்போது நான் எழுதியதாக கூறி வெளியாகி உள்ள கடிதம் உண்மையானது அல்ல.
நான் எழுதிய கடிதத்தில் ஜோஸ் கே.மாணியை குற்றம் சாட்டவில்லை. அதே சமயம் என்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்து உண்மைதான். அவர்கள் அனைவர் பற்றியும் அந்த கடிதத்தில் நான் எழுதி உள்ளேன்.
அந்த கடிதம் வெளியானால் கேரள அரசியலில் பெரும் பூகம்பம் ஏற்படும். தற்போது அந்த கடிதத்தை வெளியிடும் எண்ணம் இல்லை. அந்த கடிதம் வெளியானால் அதை வைத்து பலரும் மிரட்ட தொடங்கி விடுவார்கள். நான் வாழ்க்கையில் சந்தித்த உண்மை சம்பவங்களையும், கொடுமைகளையும்தான் அதில் வெளிப்படுத்தி உள்ளேன் " இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சரிதா நாயர் தான் எழுதிய கடிதத்தை நிருபர்களிடம் காண்பித்தார். அந்த கடிதம் 30 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. ஆனால் அந்த கடிதத்தை அவர் வெளியிட மறுத்து விட்டார். இதனால் அந்த கடிதத்தில் உள்ள முழுமையான தகவல்கள் தெரியவில்லை. சரிதாநாயர் கடிதத்தை காட்டியதோடு அதில் சில பக்கங்களை புகைப்பட நிபுணர்கள் தங்கள் கெமராவால் படம் எடுத்து விட்டனர்.
அதை வைத்து பார்த்த போது அந்த கடிதத்தில் சரிதா நாயர் குற்றம் சாட்டி இருந்த சிலரின் பெயர்கள் தெரியவந்துள்ளது. தற்போது மலையாள படஉலகில் பிரபலமாக உள்ள ஒரு நடிகரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் தன்னை வற்புறுத்தி இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக சரிதா நாயர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் தான் டெல்லி சென்று இருந்தபோது சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் தன்னை பலவந்தப்படுத்தியதாகவும் பெயர்களுடன் சரிதாநாயர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.
குறித்த கடித த்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடிகர் , மோஹன் லால் என இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: இணையம்
6,914 Views


7,127 Views
மொழி திரைப்படம் வந்து சரியாக ஏழு வருஷங்கள் ஆகிவிட்டது. அந்த படத்தின் சிறப்பு காட்சியில் பேசிய எல்லாரும் ‘அதுக்குள்ள ஜோதிகா நடிப்புக்கு முழுக்கு போட்டே ஆகணுமா? சூர்யா சார்…கொஞ்சம் யோசிங்க’ என்று பேசிவிட்டு போனார்கள்.
அதற்கப்புறம், கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று எந்நேரமும் பொறுப்புள்ள குடும்ப தலைவியாகிவிட்ட ஜோதிகாவால், சினிமாவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இதோ-
ஏழு வருடங்கள் கழித்து ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஜோதிகாவையும், சூர்யாவையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய வசந்த் வந்திருந்தார். வாயார வாழ்த்தினார். ‘இவங்க ரெண்டு பேரையும் நான் அறிமுகப்படுத்தினேன் என்பது எனக்கு பெருமை.
சதாரணமாக ஒரு கல்யாண வீட்டுக்கு போனால் கூட அதுவரை என்னை சாதாரணமாக பார்க்கும் குழந்தைகள், ‘இவர்தான் சூர்யா ஜோதிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்’ என்று சொன்னால் போதும். ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள்’ என்று கூறி தானும் சந்தோஷப்பட்டு, சூர்யா ஜோதிகாவையும் சந்தோஷப்படுத்திவிட்டு போனார். (இறுதியாக பேசிய ஜோதிகா, ‘என்னை அறிமுகப்படுத்தியது பிரியதர்ஷன் சார்தான்’ என்று வசந்தின் ‘சுயநல பெருமையை’ லேசாக இடித்துக் காட்டியது அழகு)
கே.எஸ்.ரவிகுமார், டைரக்டர் பாலா, ராதாமோகன் உள்ளிட்ட சூர்யா பேமிலியின் நலன் விரும்பிகள் அத்தனை பேரும் அங்கு வந்திருந்து வாழ்த்தினார்கள். ‘இத்தனை வருஷமா நான் போற இடங்களில் எல்லாம் ‘ஏன் ஜோவை நடிக்க வைக்க மாட்டேங்கிறீங்க?’ என்று எங்கிட்ட கோவப்படாத ஆட்களே கிடையாது.
எல்லாருக்கும் நான் ஏதோ ஒரு பதிலை சொல்லி தப்பிச்சு வந்திருக்கேன். அந்த நேரத்தில்தான் ‘HOW OLD ARE YOU’ படத்தை ரீமேக் பண்ணலாம்னு எங்கிட்ட சொன்னாங்க. அந்த படம் வெறும் படமா மட்டும் இல்லாமல் பெண்கள் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய பல விஷயங்கள் அதில் இருந்தது. அதனால்தான் அதில் ஜோ நடிச்சா நல்லாயிருக்கும் முடிவு பண்ணினோம்’ என்றார் சூர்யா.
எல்லாவற்றையும் விட பெரும் பேறு ஒன்றை பெற்றார் ஜோதிகா. ஒரு காலத்தில் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு குறுக்கே நிற்பவரே அவர்தான் என்று கருதப்பட்ட சிவக்குமார், இந்த விழாவில் அப்படியொரு அற்புதமான வார்த்தைகளால் புகழ்ந்தார் ஜோதிகாவை. ‘எனக்கு இரண்டு மகள்கள். ஒண்ணு நான் பெற்ற மகள் பிருந்தா. இன்னொன்று இறைவனா பார்த்துக் கொடுத்த ஜோ’ என்றார் அவர்.
‘என் உலகமே சூர்யாதான்’ என்று நெஞ்சுருகினார் ஜோ.
குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்ததாக முடிய… கோடம்பாக்கம் ஒரு புதிய நம்பிக்கையோடு காத்திருக்கிறது. அது ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தின் ரிலீஸ் தேதியன்றி வேறென்ன?
19,493 Views
அதிமுக- திமுக வினரின் அன்றாட குடுமிப்பிடி உலகறிந்த விஷயம். அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அஜீத் விஜய் ரசிகர்களின் யுத்தம். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், இருபிரிவாக இருக்கிறார்கள். ஒன்று அஜீத். இன்னொன்று விஜய்.
படத்திலும் சரி, நிஜத்திலும் சரி, யாரோ யாரையோ திட்டினால்தான் பிழைப்பு என்றால், அதை சந்தோஷமாக செய்வதற்கு ஒரு பெரும் கூட்டம் கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த பெரும் கூட்டத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் ‘கங்காரு’ பட இயக்குனர் சாமி.
போன வாரமெல்லாம் கொம்பன் கிருஷ்ணசாமி? இந்த வாரம் முழுக்க இந்த சாமியா? என்று அதிர்ச்சியடைய தேவையில்லை. இவர் தரப்போகும் பிரச்சனை சென்சார் வரைக்கும் போகுமா என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் விஜய்யை பற்றி சர்ச்சைக்குரிய வசனங்களை வைத்தால் அதற்கெல்லாமா சென்சார் கத்தரி தூக்கும்?
கடந்த ஒரு வருடமாகவே அஜீத்திடம் கதை சொல்ல முயன்று வருகிறாராம் சாமி. அவரை எளிதில் ரீச் பண்ணுவதற்கு இதைவிட சிறந்த குறுக்கு வழி இல்லை என்று முடிவு செய்திருக்கலாம். அது அவருக்கே வெளிச்சம். ஆனால் படத்தில் விஜய்- அஜீத் ரசிகைகள் என்று இருவரை காண்பித்திருக்கிறாராம். அந்த இருவரும் தங்கள் ஹீரோதான் TOP என்று பேசுகிற வரைக்கும் கூட பிரச்சனையில்லை.
ஆனால் திட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்புவதுதான் பிரச்சனை. அதிலும் அஜீத் ரசிகை விஜய்யை திட்டுவதை காது கொடுத்து கேட்க முடியாது என்கிறார்கள். பல வருடங்களாக விஜய்க்கும் கதை சொல்ல முயன்றவர்தான் சாமி என்ற தகவலும் வருகிறது. அந்த ஆத்திரத்தையெல்லாம் மனதில் கொண்டுதான் வசனம் எழுதியிருக்கிறாராம்.
அதே நேரத்தில் அஜீத்தை திட்டுகிற விஜய் ரசிகை பஞ்சு மிட்டாயால் ஒத்தடம் கொடுப்பது போல பேருக்கு நாலு வார்த்தைகள் மட்டும் பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கிறதாம் காட்சி. படம் வெளிவருவதற்கு முன்பே இதென்ன ஓரவஞ்சனை? என்ற கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். ‘படத்தை எங்கிட்ட காட்டிட்டுதான் ரிலீஸ் பண்ணணும்’ என்று விஜய்யின் அப்பா கிளம்பி வராமல் இருந்தால் சரி.
=== CASTRO RAHUL ===
26,153 Views
1,912 Views
திரைப்படத்துறையில் உள்ள மென்மையான மனிதர்களில் இயக்குநர் விக்ரமன் முக்கியமானவர். புதுவசந்தம் படத்தை இயக்கிய பிறகு புகழின் உச்சியில் இருந்தபோதும் பந்தா இல்லாமல் எளிமையாக இருந்தவர்.
அனைவரிடமும் நட்புடனும், மரியாதை உடனும் பழகக்கூடியவர் விக்ரமன்.தற்போது தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். ஆனாலும் அவரது குணம் மாறியதில்லை.
இப்படிப்பட்ட விக்ரமனையே ஒரு கத்துக்குட்டி நிகழ்ச்சித்தொகுப்பாளர் கோபப்பட வைத்துவிட்டார். ராதிகாவின் ராடன் மீடியா தயாரிப்பில் எ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் – இது என்ன மாயம்.
இப் படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட அந்த விழாவில் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் விக்ரமனும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சித்தொகுப்பாளர்களில் ஒருவரான பாலாஜி, விக்ரமனைப் பேச அழைத்தபோது,
”இப்போது டைரக்டர் விக்ரமன் சென்ட்டிமெட்டாக.. நம்மை எல்லாம் கண்கலங்க வைக்கும்படி பேசுவார்” என்று நக்கலாக சொன்னார்,
அதாவது விக்ரமனின் படங்கள் சென்ட்டிமெண்ட்டாக … ரசிகர்களை அழ வைக்கும்படி இருக்கும் என்ற அர்த்தத்தில் கிண்டலாக அவர் குறிப்பிட்டதை விழாவுக்கு வந்தவர்கள் யாரும் ரசிக்கவில்லை.
குறிப்பாக விக்ரமனுக்குப் பிடிக்கவில்லை இது என்ன மாயம் படத்தைப் பற்றி சம்பிரதாயமாக சில வார்த்தைகள் வாழ்த்திப்பேசிவிட்டு பாலாஜியை ஒரு பிடிபிடித்தார்.
“ என் படங்கள் எல்லாமே சென்ட்டிமெண்ட் படங்கள் அல்ல. காமெடிப்படங்களும் எடுத்திருக்கிறேன். இன்னொரு விஷயம்… நான் collegeல் படிக்கும்போது colege செக்ரட்டரியாக இருந்தவன். எனக்கு உங்களைவிட கலாய்க்கத் தெரியும். ஜெண்டில்மேனாக நடித்துக் கொண்டிருக்கிறேன்”
என்று பாலாஜியின் தலையில் ‘ணங்’ என்று விக்ரமன் குட்டு வைத்த பிறகு பாலாஜியின் முகத்தைப் பார்க்கணுமே….
=== CASTRO RAHUL ===
11,926 Views
5,526 Views