Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழில் உள்ள முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டவர்கள் தான், நடிகைகளான அனுஷ்கா மற்றும் தமன்னா. அஜித் விஜய் சூர்யா என, அத்தனை ஹீரோக்களோடும் ஒரு வலம் வந்தவர்கள்  இருவரும்!
5,778 Views
சீனாவை சேர்ந்த மின்செங் வங்கியும் ஹூரன் ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு மூலம் சீனாவில் ரூபா 500 கோடிக்கும் மேல் சொத்துக்களை வைத்துள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 17000 பேரையும் தாண்டியுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

   நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் இருந்த போதும், அந்த நாட்டில் இது வரை இல்லாத அளவுக்கு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்த 500 கோடி  சொத்து மதிப்புள்ள இந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 315 லட்சம் கோடி ரூபா பெறுமதியாகும் அதாவது இவர்களின் சொத்து மதிப்பு நோர்வை நாட்டின் உள் நாட்டு உற்பத்தியை விட 10 மடங்கு அதிகமாம். இந்த பணக்காரர்கள் பெரிதும் வீடு விற்பனை துறை,தொழில் முறை முதலீட்டு துறையை சார்ந்தவர்கள் என்று  அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Rimzath
2,294 Views
நடிப்புக்காக படிப்பை விட்ட நடிகைகள்தான் அதிகம். லட்சுமிமேனனோ படிப்புக்காக நடிப்பையே துறக்க முடிவு செய்தவர். பிறகு அவரது நலம்விரும்பிகள் பலரும் கேட்டுக் கொண்டதால் பரீட்சையை முடித்துவிட்டு மீண்டும் நடிக்க வர சம்மதித்தார்.
 

பரீட்சைக்காக புதுப்பட வாய்ப்புகளை மறுத்து வந்த லட்சுமிமேனன், தற்போது பரீட்சையை எழுதி முடித்துவிட்டதால் இனி புதுப்படங்களை ஒப்புக்கொள்ள இருக்கிறாராம். ‘கொம்பன்’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரளத்திலிருந்து சென்னைக் வந்திருந்தார் லட்சுமிமேனன்.
 

அப்போதுதான் இந்தத் தகவலை தெரிவித்தார்.
 

பிறகு ‘கொம்பன்’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்…
 

”கொம்பன்’ படத்தில் நடித்தது பற்றி சொல்ல வேண்டும் என்றால்… அந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கும்போது ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் இயக்குனர் முத்தையா கஷ்டப்பட்டு, விரிவாக சொல்லிகிட்டே இருப்பார்!  நான்தான் நல்லா நடிக்கிறேனே, எதற்கு இவர் இப்படியெல்லாம் ஸ்ட்ரெயின் பண்ணி சொல்லி தருகிறார் என்று அப்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு!


சொல்லப் போனால் அவர் அப்படி சொல்லி தரும்போது விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன்! ஆனால் இப்போது தெரிந்தது எதற்கு அவர் அப்போது அப்படியெல்லாம் சொல்லி தந்தார் என்று! படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு கொம்பன் படத்திற்கு கிடைத்துள்ளது. தினம் தினம் எனக்கு நிறைய Phone Calls  வருகிறது.”
 

என்று முத்தையா மற்றும் கொம்பன் பற்றி சிலாகித்துப்பேசிய லட்சுமி மேனன் அடுத்து சொன்னதுதான் ஹைலைட்ஸ்
 

”நான் இதுவரைக்கும் ‘கொம்பன்’ படத்தை பார்க்கவில்லை. அதற்கு காரணம் இதுவரை நடந்து வந்த பரீட்சைதான். ஆனால் கண்டிப்பாக விரைவில் பார்த்து விடுவேன்!”
 
செம படிப்பா இருப்பார் போலருக்கே!


=== CASTRO RAHUL ===
21,500 Views

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான திரைப்படங்களை அளிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் ‘இக்னைட் பிக்சர்ஸ்’ நிறுவனத்தாரின் முதல் படைப்பு ‘டொலர் தேசம்.’


அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது ‘டொலர் தேசம்’.


பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.


சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு.


நவீன திரைக்கதை உத்தியோடு சொல்லபட்டிருக்கும் இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.


‘பருத்தி வீரன்’, ‘யோகி’ படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக அவதாரம் எடுத்து அறிமுகமாகிறார்.


பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றிய பிரசாத் வி.குமார் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 


‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மற்றும் ‘மூடர்கூடம்’ படங்களில் பணியாற்றிய அத்தியப்பன் சிவா, படத்தொகுப்பை கையாள்கிறார். பாடல்கள் சினேகன். படத்திற்கு வசனம் – சுந்தர் மற்றும் இந்திரஜித்.


மேலும் பல தொழில் நுட்பக் கலைஞர்கள் பணிபுரியும் இத்திரைப்படம் வெகுவிரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

=== CASTRO RAHUL ===
2,198 Views
என்னது? நம்ம இளைய தளபதி விஜய் திருநங்கையா? அடடா... அப்பிடி எல்லாம் அவரு நடிக்க மாட்டாரே? நம்பலாமா? விடலாமா? இப்படி ஆயிரம் கேள்விக்குறிகள் வந்து உங்கள் மனதையும் பிராண்ட ஆரம்பித்திருக்கும். இதனால் தான், பதறாமல் கீழே உள்ள செய்திகளையும் வாசிங்கன்னு சொல்றோம். 

என்னமோ நடக்குது படத்தை அடுத்து இயக்குனர் ராஜபாண்டி மற்றும் நடிகர் விஜய் வசந்த் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் அச்சமின்றி. இந்த படத்தில் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக வெளிவந்த செய்தி இப்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்க்கு பதில் வழங்கியுள்ள இயக்குனர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் சிகண்டி என்ற மகாபாரதத்தில் வரும் கேரக்டரின் பெயரை டைட்டிலாக வைத்திருந்ததாகவும், சிகண்டி என்ற கதாபாத்திரம் மகாபாரத போரில் பீஷ்மரை பழிவாங்க சரியான நேரத்திற்காக காத்திருந்ததை போல, இந்த படத்தின் ஹீரோ தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற சரியான நேரத்திற்காக காத்திருப்பதால் இந்த தலைப்பை முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால் விசமிகள் சிகண்டி பாத்திரம், மகாபாரதத்தில் திருநங்கையாக இருப்பதால் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

உண்மையில் விஜய் வசந்த் திருநங்கை பாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் நாயகனாகவும் நல்ல பாத்திரத்திலே தான் நடிக்கிறார் என்றும் இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
6,012 Views

காதல் கணவர் விஜயின் இயக்கத்தில் , இது என்ன மாயம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை மைனா அமலாபால் தனது கணவரை கலாய்த்தது அந்த நிகழ்வில் ஒரு ஹைலைட்.

அதாவது, வெளிநாடுகளுக்கு சென்றோம் என்றால், அங்கும் எனது ஆசைக்கணவர் கதை சொல்லி சொல்லியே என்னை சாகடிப்பார். நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பேன். என்ன செய்ய? நம்ம கணவர் ஆயிற்றே?

இப்படியாக, எனக்கும் சொல்லி நானும் கதையை மிகவும் இரசித்து அவரிடம் படமாக்கச் சொல்லி சொன்ன படம் தான், இப்பொழுது விக்ரம் பிரபு நடிப்பில் வந்துள்ள இது என்ன மாயம் படம். அவ்வளவு அற்புதமான கதை இந்தப் படமாக உருவாகியுள்ளது என்று சிரித்துள்ளார் அம்மணி.

வீட்டில சண்டை போடாமல் இருந்தால் சரிதான் அம்மணி...!!

-கோடம்பாக்கக் குருவி-
12,714 Views
படிக்கும் காலத்தில் எனக்கும் ஒரு பெண்ணுக்கும், அழகான காதல் மலர்ந்திருந்தது. காதல்ன்னா அப்பிடி ஒரு காதல். அல்லு அர்ஜுன் மூலமாக தான் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் உறவு ஆரம்பித்தது. நல்ல முறையாக நடந்த எமது காதலில், சில பிரச்சினைகள் வந்து அந்த காதலை முடித்துக் கொள்ளவேண்டி வந்தது. இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பிறகு, உங்களுக்கும் தெரியுமே !

எனக்கு வரும் காதல் நிலையில்லாதது அத்தோடு நிரந்தரமற்றது. இப்பொழுது தனிமை மட்டுமே எனக்கு துணையாக உள்ளது. கவலைப் படவில்லை. வாழ்க்கை போகும் போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன். இவ்வாறு சோகம் மல்க பெசியுல்லவர் யார் தெரியுமா?

நம்ம நடிகை த்ரிஷாவின் முன்னாள் (நல்ல) நண்பர் திரு ராணா அவர்கள் தான். என்ன பண்ண பாஸ்? காலம் இப்பிடித்தான். ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டே இருக்கும்.

-கோடம்பாக்கக் குருவி-
3,633 Views
இந்திய கிரிக்கெட் அணித்தலைவருக்கு போலிஸ் அபராதம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் MS தோனிக்கு போலிஸ் அபராதம் விதிக்கபட்டிருக்கிறது.கிரிக்கெட் போட்டிகளில் குறித்த நேரத்திற்குள் பந்து வீச தவறும் பட்சத்தில் அணியின் தலைவராக இருந்த தோனிக்கு அபராதம் விதிக்கபட்ட வரலாறு அதிகம் இருக்கிறது.

ஆனால் இப்போது இவருக்கு சட்ட ஒழுங்கை மீறினார் எனும் அடிப்படையில் போலிஸ் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறமை எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.

IPL போட்டிகள் ஆரம்பமாகும் நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் தீவிர ஆற்றலைக் காட்டி வரும் மஸ்த், ஒரு மோட்டார் வாகனப் பிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.விதவிதமாக மோட்டார் வாகனம் வாங்குவதும் அதனை செலுத்துவதும் இவரது பொழுது போக்குகளாகும்

தனது இருசக்கர வாகனத்தின் இலக்க தகட்டை தவறாக வைத்திருந்ததன் காரணமாக அவருக்கு அபராதம் விதித்தது அவரது சொந்த ஊரான ராஞ்சி போலீஸ்.

இலக்க தகடு சரியாக இல்லாத காரணத்தினால் தோனிக்கு 450/= அபராதம் விதித்ததாக ராஞ்சி போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

வாகனத்தின் ஒளி விழக்குக்கு கீழ் பகுதியில் அதாவது சாரதிக்கு குறுக்கான திசையில் இருக்க வேண்டிய இலக்க தகடு வாகனத்தின் திசையிலேயே பக்கவாட்டில் இருந்த காரணத்தாலேயே இந்த அபராதம் விதிக்கபட்டது.

நேற்று ஜுவ்ராஜின் தந்தையாரால அதிகம் விமர்சிக்கப்பட்ட நிலையில் தோனியின் இந்த அபராத விடயமும் அவர் ரசிகர்களை இன்னும் கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

*T.T


6,018 Views

இந்தியாவின் கேரளாவை சேர்ந்தவர் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர். இவர் கேரள மற்றும் தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சூரியவெப்ப தகடுகளை பொருத்தி தருவதாக பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சரிதாநாயர் பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் சரிதா நாயர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது எழுதியதாக கூறி ஒரு கடிதம் கேரளாவில் வெளியானது. அதில் கேரள நிதி மந்திரி மாணியின் மகனும் எம்.பி.யுமான ஜோஸ் கே.மாணியும் சரிதாநாயரை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை சரிதாநாயரும், ஜோஸ் கே.மாணியும் மறுத்தனர்.

இந்த பிரச்சினை பற்றி திருவனந்தபுரத்தில் சரிதா நாயர் நிருபர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இதன்போது அவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். சரிதா நாயர் கூறியதாவது:–

"என்னை மிரட்டியவர்கள், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர்கள் பற்றி சிறையில் இருந்த போது நான் கடிதம் எழுதியது உண்மைதான். ஆனால் தற்போது நான் எழுதியதாக கூறி வெளியாகி உள்ள கடிதம் உண்மையானது அல்ல.

நான் எழுதிய கடிதத்தில் ஜோஸ் கே.மாணியை குற்றம் சாட்டவில்லை. அதே சமயம் என்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்து உண்மைதான். அவர்கள் அனைவர் பற்றியும் அந்த கடிதத்தில் நான் எழுதி உள்ளேன்.

அந்த கடிதம் வெளியானால் கேரள அரசியலில் பெரும் பூகம்பம் ஏற்படும். தற்போது அந்த கடிதத்தை வெளியிடும் எண்ணம் இல்லை. அந்த கடிதம் வெளியானால் அதை வைத்து பலரும் மிரட்ட தொடங்கி விடுவார்கள். நான் வாழ்க்கையில் சந்தித்த உண்மை சம்பவங்களையும், கொடுமைகளையும்தான் அதில் வெளிப்படுத்தி உள்ளேன் " இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சரிதா நாயர் தான் எழுதிய கடிதத்தை நிருபர்களிடம் காண்பித்தார். அந்த கடிதம் 30 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. ஆனால் அந்த கடிதத்தை அவர் வெளியிட மறுத்து விட்டார். இதனால் அந்த கடிதத்தில் உள்ள முழுமையான தகவல்கள் தெரியவில்லை. சரிதாநாயர் கடிதத்தை காட்டியதோடு அதில் சில பக்கங்களை புகைப்பட நிபுணர்கள் தங்கள் கெமராவால் படம் எடுத்து விட்டனர்.

அதை வைத்து பார்த்த போது அந்த கடிதத்தில் சரிதா நாயர் குற்றம் சாட்டி இருந்த சிலரின் பெயர்கள் தெரியவந்துள்ளது. தற்போது மலையாள படஉலகில் பிரபலமாக உள்ள ஒரு நடிகரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் தன்னை வற்புறுத்தி இச்சைக்கு பயன்படுத்தி கொண்டதாக சரிதா நாயர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் தான் டெல்லி சென்று இருந்தபோது சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் தன்னை பலவந்தப்படுத்தியதாகவும் பெயர்களுடன் சரிதாநாயர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.

குறித்த கடித த்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடிகர் , மோஹன் லால் என இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: இணையம்

6,914 Views
கிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இலங்கை அணியின் கிரிக்கெட் நட்சத்திரமும், உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தவருமான குமார் சங்கக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
சங்கக்காரவின் கடந்த வருட சிறப்பான பெறுபேறுகளுடன் உலகக்கிண்ணத்தில் அவர் பெற்ற 4 தொடர்ச்சியான சத சாதனைகளும் சங்காவுக்கு இந்த விருதை வழங்குவதில் விஸ்டன் பெருமை கொள்வதாக விஸ்டன் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, ஒவ்வொரு ஆண்டையும் போல இவ்வாண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்களில் கடந்த வருடத்தில் சிறப்பாகப் பிரகாசித்த இலங்கை அணியின் தலைவர் அன்ஜெலோ மத்தியூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே சிறப்பாக விளையாடியிருந்த இவ்விருவரும் பெருமைப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, இங்கிலாந்தின் இளம் வீரர்களான கரி பலன்ஸ், மொயீன் அலி ஆகியோருடன், இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இப்போது இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்துள்ள அடம் லித் மற்றும் சிறப்பாகப் பந்துவீசிய நியூ சீலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் ஜீத்தான் பட்டேலும் பெயரிடப்பட்டுள்ளனர்.
 
முதல் தடவையாக இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள முன்னணி கிரிக்கெட் வீராங்கனை என்ற விருது அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவி மெக் லன்னிங்குக்கு கிடைத்துள்ளது.
 
7,127 Views

மொழி திரைப்படம் வந்து சரியாக ஏழு வருஷங்கள் ஆகிவிட்டது. அந்த படத்தின் சிறப்பு காட்சியில் பேசிய எல்லாரும் ‘அதுக்குள்ள ஜோதிகா நடிப்புக்கு முழுக்கு போட்டே ஆகணுமா? சூர்யா சார்…கொஞ்சம் யோசிங்க’ என்று பேசிவிட்டு போனார்கள்.


அதற்கப்புறம், கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று எந்நேரமும் பொறுப்புள்ள குடும்ப தலைவியாகிவிட்ட ஜோதிகாவால், சினிமாவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இதோ-

ஏழு வருடங்கள் கழித்து ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஜோதிகாவையும், சூர்யாவையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய வசந்த் வந்திருந்தார். வாயார வாழ்த்தினார். ‘இவங்க ரெண்டு பேரையும் நான் அறிமுகப்படுத்தினேன் என்பது எனக்கு பெருமை.


சதாரணமாக ஒரு கல்யாண வீட்டுக்கு போனால் கூட அதுவரை என்னை சாதாரணமாக பார்க்கும் குழந்தைகள், ‘இவர்தான் சூர்யா ஜோதிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்’ என்று சொன்னால் போதும். ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள்’ என்று கூறி தானும் சந்தோஷப்பட்டு, சூர்யா ஜோதிகாவையும் சந்தோஷப்படுத்திவிட்டு போனார். (இறுதியாக பேசிய ஜோதிகா, ‘என்னை அறிமுகப்படுத்தியது பிரியதர்ஷன் சார்தான்’ என்று வசந்தின் ‘சுயநல பெருமையை’ லேசாக இடித்துக் காட்டியது அழகு)


கே.எஸ்.ரவிகுமார், டைரக்டர் பாலா, ராதாமோகன் உள்ளிட்ட சூர்யா பேமிலியின் நலன் விரும்பிகள் அத்தனை பேரும் அங்கு வந்திருந்து வாழ்த்தினார்கள். ‘இத்தனை வருஷமா நான் போற இடங்களில் எல்லாம் ‘ஏன் ஜோவை நடிக்க வைக்க மாட்டேங்கிறீங்க?’ என்று எங்கிட்ட கோவப்படாத ஆட்களே கிடையாது. 



எல்லாருக்கும் நான் ஏதோ ஒரு பதிலை சொல்லி தப்பிச்சு வந்திருக்கேன். அந்த நேரத்தில்தான் ‘HOW OLD ARE YOU’ படத்தை ரீமேக் பண்ணலாம்னு எங்கிட்ட சொன்னாங்க. அந்த படம் வெறும் படமா மட்டும் இல்லாமல் பெண்கள் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய பல விஷயங்கள் அதில் இருந்தது. அதனால்தான் அதில் ஜோ நடிச்சா நல்லாயிருக்கும் முடிவு பண்ணினோம்’ என்றார் சூர்யா.


எல்லாவற்றையும் விட பெரும் பேறு ஒன்றை பெற்றார் ஜோதிகா. ஒரு காலத்தில் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு குறுக்கே நிற்பவரே அவர்தான் என்று கருதப்பட்ட சிவக்குமார், இந்த விழாவில் அப்படியொரு அற்புதமான வார்த்தைகளால் புகழ்ந்தார் ஜோதிகாவை. ‘எனக்கு இரண்டு மகள்கள். ஒண்ணு நான் பெற்ற மகள் பிருந்தா. இன்னொன்று இறைவனா பார்த்துக் கொடுத்த ஜோ’ என்றார் அவர்.


‘என் உலகமே சூர்யாதான்’ என்று நெஞ்சுருகினார் ஜோ.


குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்ததாக முடிய… கோடம்பாக்கம் ஒரு புதிய நம்பிக்கையோடு காத்திருக்கிறது. அது ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தின் ரிலீஸ் தேதியன்றி வேறென்ன?

 === CASTRO RAHUL ===
19,493 Views

அதிமுக- திமுக வினரின் அன்றாட குடுமிப்பிடி உலகறிந்த விஷயம். அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அஜீத் விஜய் ரசிகர்களின் யுத்தம். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், இருபிரிவாக இருக்கிறார்கள். ஒன்று அஜீத். இன்னொன்று விஜய்.


படத்திலும் சரி, நிஜத்திலும் சரி, யாரோ யாரையோ திட்டினால்தான் பிழைப்பு என்றால், அதை சந்தோஷமாக செய்வதற்கு ஒரு பெரும் கூட்டம் கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த பெரும் கூட்டத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் ‘கங்காரு’ பட இயக்குனர் சாமி.

போன வாரமெல்லாம் கொம்பன் கிருஷ்ணசாமி? இந்த வாரம் முழுக்க இந்த சாமியா? என்று அதிர்ச்சியடைய தேவையில்லை. இவர் தரப்போகும் பிரச்சனை சென்சார் வரைக்கும் போகுமா என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் விஜய்யை பற்றி சர்ச்சைக்குரிய வசனங்களை வைத்தால் அதற்கெல்லாமா சென்சார் கத்தரி தூக்கும்?

கடந்த ஒரு வருடமாகவே அஜீத்திடம் கதை சொல்ல முயன்று வருகிறாராம் சாமி. அவரை எளிதில் ரீச் பண்ணுவதற்கு இதைவிட சிறந்த குறுக்கு வழி இல்லை என்று முடிவு செய்திருக்கலாம். அது அவருக்கே வெளிச்சம். ஆனால் படத்தில் விஜய்- அஜீத் ரசிகைகள் என்று இருவரை காண்பித்திருக்கிறாராம். அந்த இருவரும் தங்கள் ஹீரோதான் TOP என்று பேசுகிற வரைக்கும் கூட பிரச்சனையில்லை.

ஆனால் திட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்புவதுதான் பிரச்சனை. அதிலும் அஜீத் ரசிகை விஜய்யை திட்டுவதை காது கொடுத்து கேட்க முடியாது என்கிறார்கள். பல வருடங்களாக விஜய்க்கும் கதை சொல்ல முயன்றவர்தான் சாமி என்ற தகவலும் வருகிறது. அந்த ஆத்திரத்தையெல்லாம் மனதில் கொண்டுதான் வசனம் எழுதியிருக்கிறாராம்.


அதே நேரத்தில் அஜீத்தை திட்டுகிற விஜய் ரசிகை பஞ்சு மிட்டாயால் ஒத்தடம் கொடுப்பது போல பேருக்கு நாலு வார்த்தைகள் மட்டும் பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கிறதாம் காட்சி. படம் வெளிவருவதற்கு முன்பே இதென்ன ஓரவஞ்சனை? என்ற கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். ‘படத்தை எங்கிட்ட காட்டிட்டுதான் ரிலீஸ் பண்ணணும்’ என்று விஜய்யின் அப்பா கிளம்பி வராமல் இருந்தால் சரி.

=== CASTRO RAHUL ===

26,153 Views
ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பாடுவது தமிழ் திரையுலகில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது தமன் இசையமைத்து வரும் ‘அப்பாடக்கர்’ படத்திற்கு இமான் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா , அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்து வரும் படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இமான் புஜ்ஜிமா... என்ற பாடலை பாடியிருக்கிறார். இதற்கு நா.முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். 

ஏற்கனவே சிம்பு மற்றும் சுவாதி ஆகியோர் இப்படத்தில் இடம் பெறும் டூயட் பாடலை பாடியிருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்க்கலாம், எப்படி இந்தப் பாடல் வந்து எம்மை சேரப்போகிறது என்று?

-கோடம்பாக்கக் குருவி-
1,912 Views

திரைப்படத்துறையில் உள்ள மென்மையான மனிதர்களில் இயக்குநர் விக்ரமன் முக்கியமானவர். புதுவசந்தம் படத்தை இயக்கிய பிறகு புகழின் உச்சியில் இருந்தபோதும் பந்தா இல்லாமல் எளிமையாக இருந்தவர்.


அனைவரிடமும் நட்புடனும், மரியாதை உடனும் பழகக்கூடியவர் விக்ரமன்.தற்போது தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். ஆனாலும் அவரது குணம் மாறியதில்லை.


இப்படிப்பட்ட விக்ரமனையே ஒரு கத்துக்குட்டி நிகழ்ச்சித்தொகுப்பாளர் கோபப்பட வைத்துவிட்டார். ராதிகாவின் ராடன் மீடியா தயாரிப்பில் எ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் – இது என்ன மாயம்.


இப் படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட அந்த விழாவில் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் விக்ரமனும் கலந்து கொண்டார்.


நிகழ்ச்சித்தொகுப்பாளர்களில் ஒருவரான பாலாஜி, விக்ரமனைப் பேச அழைத்தபோது,


”இப்போது டைரக்டர் விக்ரமன் சென்ட்டிமெட்டாக.. நம்மை எல்லாம் கண்கலங்க வைக்கும்படி பேசுவார்” என்று நக்கலாக சொன்னார்,

அதாவது விக்ரமனின் படங்கள் சென்ட்டிமெண்ட்டாக … ரசிகர்களை அழ வைக்கும்படி இருக்கும் என்ற அர்த்தத்தில் கிண்டலாக அவர் குறிப்பிட்டதை விழாவுக்கு வந்தவர்கள் யாரும் ரசிக்கவில்லை.


குறிப்பாக விக்ரமனுக்குப் பிடிக்கவில்லை இது என்ன மாயம் படத்தைப் பற்றி சம்பிரதாயமாக சில வார்த்தைகள் வாழ்த்திப்பேசிவிட்டு பாலாஜியை ஒரு பிடிபிடித்தார்.


“ என் படங்கள் எல்லாமே சென்ட்டிமெண்ட் படங்கள் அல்ல. காமெடிப்படங்களும் எடுத்திருக்கிறேன். இன்னொரு விஷயம்… நான் collegeல் படிக்கும்போது colege செக்ரட்டரியாக இருந்தவன். எனக்கு உங்களைவிட கலாய்க்கத் தெரியும். ஜெண்டில்மேனாக நடித்துக் கொண்டிருக்கிறேன்”

என்று பாலாஜியின் தலையில் ‘ணங்’ என்று விக்ரமன் குட்டு வைத்த பிறகு பாலாஜியின் முகத்தைப் பார்க்கணுமே….



 === CASTRO RAHUL ===

 

11,926 Views
இளையதளபதி விஜய் நடிக்கும் படங்களுக்கு எப்படி எதிர்பார்ப்புக்கள் உள்ளதோ, அப்படியே அவரது படப் பாடல்களுக்கும் பரவலான எதிர்பார்ப்பு சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரைக்கும் உண்டு. அந்தளவுக்கு, விஜய்யின் திரைப்படப் பாடல்களுக்கு பலர் அடிமை.

இந்நிலையில், இப்பொழுது புலி படத்தை முடித்த கையேடு இயக்குனர் அட்லீ இயக்கம் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.

இது நமக்கு தெரிஞ்ச விசயம்தானே மாப்ளன்னு, நீங்க பாக்குறது புரியுதுப்பா. இனிதான் மேட்டர் இருக்கு. அதாவது..... இந்தப் படத்தில் அண்மையில் தேசிய விருதைப் பற்றுக்கொண்ட பாடகி, பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் புதல்வி உத்ரா ஒரு பாடலை பாடவுள்ளார்.

இந்தப் பாடலை மிக பிரம்மாண்டமாகவும், இனிமையாகவும் எடுக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

-கோடம்பாக்கக் குருவி-
5,526 Views
[1]      «      1703   |   1704   |   1705      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top