Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அவ்வப்போது பிரச்சினைகளில் நட்சத்திரங்கள் சிக்குவது இப்பொழுது ஒரு அழகு ஆகிவிட்டது. இந்நிலையில் இப்பொழுது சிக்கியிருப்பவர் தமிழிலும் சில படங்களில் தலைகாட்டிய நடிகை சார்மி, இவர் அடிக்கடி சிக்கல்களில் சிக்குவது வழமை.

ஆனாலும், இந்தமுறை தானே தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டோ கொட்டென்று கொட்டியுள்ளார். அதாவது, இன்றைய தினம் தனக்கு திருமணம் என ஒரு செய்தியை தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மணக்கோலத்தில் ஒரு புகைப்படமும் இடப்படுள்ளது.

என்னம்மா, யாருக்கும் சொல்லாமல் இப்பிடி பண்ணீட்டியே என்று பலரும் பதறிப் போன நிலையில், இன்னொரு தரப்பு, இது அவரது அடுத்த படத்துக்கான ஒரு ஏற்பாடாக இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இப்பிடியுமா பண்ணுவாங்க?
யோசிக்கும் போதே தலை வலிக்குதும்மா....

-கோடம்பாக்கக் குருவி-
3,358 Views

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'சைவம்' திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதை உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் பெற்றார் என்ற பெருமை நிலையில், இந்த படம் மற்றொரு பெருமையையும் தற்போது பெற்றுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனன் மனைவியும், விலங்குகள் நல காப்பாளரும், பிரபல நடிகையுமான அமலா, சமீபத்தில் 'சைவம்' படத்தை பார்க்குமாறு மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு பரிந்துரை செய்துள்ளார். அமைச்சர் மேனகா காந்தியும் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை பெரிதும் பாராட்டியதோடு, இந்த படத்தை பார்க்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் பரிந்துரை செய்துள்ளார்.

எனவே விரைவில் ஏற்பாடு செய்யவிருக்கும் சிறப்பு காட்சி ஒன்றில் பிரதமர் மோடி இந்த படத்தை பார்க்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. நாசர், பேபி சாரா, சண்முகராஜன், சுரேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் என்பதோடு இயக்குனர் விஜய் படத்தை இயக்கியுள்ளார் என்பதும் முக்கியமானது.

-கோடம்பாக்கக் குருவி-
9,241 Views
பிரபல டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான பிரபுதேவா நேற்று முன் தினம் தனது பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில், பிரபுதேவா தனது பிறந்த நாளில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

கடந்த ஆண்டுவெளியான ஆக்சன் ஜாக்சன் படத்தை அடுத்து பிரபுதேவா இயக்கவுள்ள 'சிங் இஸ் பிலிங்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளி தொடங்கியுள்ளது. அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஜோடி சேரும் இந்த படத்தில் முன்னாள் உலக அழகி லாரா தத்தாவும் இணைந்துள்ளார்.

ப்ரிதம் சக்கரவர்த்தி இசையமைக்கும் இந்த படம், வரும் அக்டோபர் 2 ஆம் திகதி காந்தி ஜெயந்தி நாளில் வெளியாகுமென என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனை, பிரபுதேவா தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
2,369 Views


தமிழ் சினிமாவுக்கு நல்ல காலமா, அல்லது கேட்ட கிரகமா என தெரியாதளவுக்கு பல அதிசயங்கள் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. சில மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும், இன்னும் பல பலரின் சாபங்களுக்கு உள்ளாகி விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த மா.கா.பா.ஆனந்த், சினிமாவுக்கும் நுழைந்தார். ஆரம்பத்தில் இரண்டு படங்களில் இணை நாயகனாக நடித்தார். படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், வேறு பட வாய்ப்புக்களை வாங்கிக் கொடுத்தன.

இந்நிலையில், இப்பொழுது வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் மா.கா.பா. அத்தோடு, இன்னும் ஒரு துறையில் காலடி பதித்துள்ளார் ஆனந்த். மொக்கப்படம் எனும் திரைப்படத்தில் தான் இவரது பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாடகர் ரெடி.

இறைவா... என அழுது புலம்புகின்றவர்கள் ஒவ்வொருவரும் என் மனதில் வந்துதான் போகிறீர்கள். என்ன செய்ய? நம்ம நிலைமை இப்பிடி...

-கோடம்பாக்கக் குருவி-
2,657 Views

துல்கர் சல்மானை தமிழுக்கு கொண்டுவந்தார்கள் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலமாய்!
ஆனாலும், அந்தப்படம் கொஞ்சம் ஏமாற்றி விட்டது. துல்கர் சல்மானுக்கு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்க அந்தப்படம் தவறி விட்டது. ஆனாலும், மீண்டும் நல்ல இடத்தைப் பெற்றுக் கொடுக்க இயக்குனர் மணிரத்னம் முடிவெடுத்துள்ளார். இதன் மூலமாக, OK கண்மணி படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும், மணிரத்னமும் இணைந்து ஒரு மறக்க முடியாத காதல் காவியத்தை திரையில் படைக்க தயாராகி வருகிறார்கள். இப்படத்தின் பாடல்கள் கூட அண்மையில் வெளியாகியுள்ளது. சூரியன்னும் முந்திக் கொண்டு முழுமையான பாடல்களை உங்களுக்கு தந்திருந்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகை நித்யாமேனன் முத்தக் காட்சியில் நடித்துள்ளதாக அண்மையில் செய்திகள் கசிந்துள்ளது. அவர் சம்மதிப்பாரா என்பது ஒரு புறம் கேள்வியாக எழுப்பப்பட்டாலும், மணிரத்னம் சம்மதிக்க வைத்திருப்பார் என பரவலாக பேசப்படுகிறது.

துல்கர் சல்மானும், நித்யாமேனனும் முத்தக் காட்சியிலும், இன்னும் நெருக்கமாக காதல் காட்சிகளிலும் கலக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, படம் வரட்டும். உண்மையா பொய்யா என அறிந்து கொள்ளுவோம். ஆனாலும், எதிர்பார்ப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

-கோடம்பாக்கக் குருவி-
3,488 Views

தமிழில் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக, எதோ நினைக்கிறேன் .. என பாடியபடி அறிமுகமானவர் நடிகை ஜோதிர்மயி. இவர் தாய்மொழி மலையாளம் என்றாலும், தமிழ் குறிப்பிடும்படியாக சில படங்களில் நடித்துள்ளார்.

நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேஷன், பெரியார், சபரி, இதயத்திருடன், அறை என் 305இல் கடவுள் போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும், ஏனோ தமிழ் சினிமாவுக்கு இவரை அதிகமாய் பிடிக்கவில்லியா. அதனால் மீண்டும் இவரது சொந்த மண்ணுக்கு வழியனுப்பி விட்டது.

இந்நிலையில், 2004இல் நிஷாந்த் குமார் எனும் கணணி இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னரும் நடிக்க ஆரம்பித்ததினால், இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றத் தொடங்கின. இதனால் சிறிது காலத்திலேயே அவரை விவாகரத்து செய்தார்.

அந்தத் திருமணம் நிறைவு பெற, மீண்டும் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ஜோதிர்மயி. பிரபலமான மலையாள சினிமாக்களின் இயக்குனர் அமல் நீரத்தை கடந்த 4ஆம் திகதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் அம்மணி.

-கோடம்பாக்கக் குருவி-
3,643 Views
நான் சென்னையில் முதன் முதலில் கண்டுகொண்ட நல்ல மனது படைத்த மனிதர் சூர்யா. நடிக்க வந்த போது, முதலில் இணைந்து நடித்தது சூர்யாவுடன், அதே போலவே என் வாழ்க்கையே அவருடன் என்றானத்தில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் எனக்கு. என் வாழ்வின் அழகிய தருணங்களை எனக்காக அமைத்து அழகுபடுத்தியவர் சூர்யா என்று, உருக்கமாக பேசியுள்ளார் ஜோதிகா.

தமிழ் சினிமாவில், மறக்க முடியாதவரும் எப்போதுமே நடிப்பில் நல்ல முத்திரை பதித்துள்ளவரும் நடிகை ஜோதிகா. இவரது நடிப்பும் நடனமும் என்றுமே அழகானவை. இவரது இடம் இன்று வரை தமிழ் சினிமாவில் வெற்றிடம்தான்.

இப்பொழுது, கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஜோதிகா. சூர்யாவின் சொந்த நிறுவனம் படத்தை தயாரிக்க, 36 வயதினிலே எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான், தனது கணவர் சூர்யா பற்றி மேடையில் மனம் நெகிழ பேசியுள்ளார் ஜோ.

ஒப்படியே, கடைசி காலம் வரை, ஒற்றுமையாக வாழ நாமும் இந்த காதல் ஜோடிகளை வாழ்த்துவோம்.

-கோடம்பாக்கக் குருவி-
12,493 Views
வட இந்தியாவிலிருந்து சென்னை வந்து குடியேறி, இன்று தமிழ் சினி உலகை ஆக்கிரமிக்கும் பட்சிகளின் ஆதிக்கம் அதிகம் எனலாம். அந்தளவுக்கு அவர்களது கொள்ளை கொள்ளும் அழகுதான் இடம் கொடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், பல நடிகைகள் தாம் நடிக்கும் படங்களில் தங்களது குரல் மூலமே பின்னணி பேசுவார்கள். சிலர் தமது குரலே தமக்கு எதிரி என்பதால், யாரையாவது வைத்து பேசுங்கள் என்று மௌனிகளாகி விடுவார்கள்.

இப்படி, தமது படங்களில் தாமே சொந்தக் குரலில் பேசி, தேசிய விருதுகளைக் கூட அள்ளி கொண்டவர்களுமுண்டு. இந்நிலையில், நடிகை தமன்னா ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில், தன் குரலிலேயே பேசப் போகிறேன் என இயக்குனரிடம் தனது ஆசையை சொல்லியுள்ளார்.

இயக்குனர் இன்னும் பதில் சொல்லவில்லிய. ஆனாலும் சம்மதிப்பார் என நம்பப்படுகிறது. ஏனெனில், தமன்னா இப்பொழுது இருக்கும் நடிகைகளில் தமிழ் சரளமாக பேசக் கூடியவர் என்பதால் இந்த பின்னணி பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்பது அவரின் எதிர்பார்ப்பு.

-கோடம்பாக்கக் குருவி-
4,283 Views
ஆங்கிலமாக இருந்தாலும், தமிழில் இன்று கோலோச்சும் நடிகையாக விளங்குகின்றவர் நடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டிணத்தில் தமிழுக்கு வந்து, அழகு நடிப்பால் தனக்கென இரசிகர்களை அள்ளிக் கொண்டவர் அம்மணி. இப்பொழுது, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகி. பல படங்களை கைவசம் வைத்துள்ளவர்களுள் ஐவரும் ஒருவர்.

அண்மையில், சூர்யாவின் மாஸ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர், தன்னை விட நயன்தாராவுக்கு முக்கியத்துவம் உள்ளபடியினால், தானாக படத்திலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில், மீண்டும் இதே நிலை அம்மணிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சுதாகரித்துக் கொண்டவர், தனுஷின் அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அப்படத்தில் சமந்தாவும் ஒரு நாயகி. இதனால், தனது பாத்திரத்தில் கை வைத்து விடுவார்கள் என்பதால், முழுமையாக கதையை படித்துக் காட்டச் சொல்லி, பின்னர் சம்மதம் கொடுத்துள்ளார்.

எனவே, எமி இப்பொழுதெல்லாம் ஏமாறத் தயாரில்லை என்பதும், கவர்ச்சிக்கு மட்டும் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டேன் எனும் கொள்கையிலும் மிக அவதானமாக உள்ளார் என்பது தெளிவு.

-கோடம்பாக்கக் குருவி-
3,283 Views
நம்ம விக்ரம் நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வரும் சமந்தா கிராமத்து நேபாளியாக ஒரு தோற்றத்தில் நடித்து வருகிறாராம், இதற்காக நேபாளிய உடை அணிந்து அண்மையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

                                                           இந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார் சமந்தாவுக்கு இரட்டை வேடம் வழங்கி உள்ளார் இயக்குனர். இந்த படமானது நெடுஞ்சாலை பயணத்தை மையமாக வைத்து படமாக்கப்படுவதோடு இந்தியாவின் மிக முக்கிய மான இடத்திலும் நேபாளத்தில் பிரபலயமான இடங்களிலும் இப்போது படப்பிடிப்புகள் இடம்பெற்று வருகின்றன. முக்கிய சண்டை காட்சிகளும் நேபாளத்தில் வைத்து எடுக்க உள்ளனர்.சமந்தாவுக்கு பெரும் வரவேற்ப்பை  கொடுக்க இருக்கும் இந்த திரைப்படம், ஐ படத்தின் பின்னர் விக்ரம் ஓய்வின்றி இந்த திரை படத்தில் நடித்து வருகிறார்.

Samantha
3,665 Views

நீங்கள் ஜோதிகாவின் அதிதீவிர ரசிகரா?

அப்படியானால்.. இந்த நியூஸ் உங்களுக்குத்தான்.

சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொன்ன ஜோதிகா 36 வயதினிலே படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த  HOW OLD ARE YOU படத்தின் ரீ-மேக்தான் – 36 வயதினிலே .


நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் 36 வயதினிலே படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. படம் எப்ப வரும் என்று பலரும் ஆவலோடு காத்திருக்க..


36 வயதினிலே படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.பின்னர் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


அதாவது, ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் ஒரு பாடலை மட்டும் அதாவது ராசாத்தி என்ற பாடலை மட்டும்.. வெளியிட இருப்பதாகவும், ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிட இருப்பதாகவும் சொல்லப்பட்டது!


36 வயதினிலே படத்தின் இசைவெளியீடு தொடர்பாக காதில் விழுந்த எந்தவொரு விஷயமும் கொம்பன் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடைபெறவில்லை.


கொம்பன் பிரச்சனைகள் ஓய்ந்து படமும் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் 36 வயதினிலே படத்தின் இசைவெளியீட்டை ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்த தீரமானித்துள்ளனர்.


சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் 36 வயதினிலே படத்தின் இசைவெளியீடு படு பிரம்மாண்டமாக நடைபெற நடைபெற உள்ளது.

படத்தின் நாயகியான ஜோதிகா இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

=== CASTRO RAHUL ===

8,573 Views

1995 ல் அருண் விஜய்யின் முதல் படம் முறைமாப்பிள்ளை படம் வெளியானது.சினிமாவில் அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அவரால் இன்னமும் முதலிடத்துக்கு வர முடியவில்லை.


அருண்விஜய் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கடைசியாக அவர் நடித்த தடையறத்தாக்க படம்தான் கமர்ஷியலாக வெற்றிபெற்ற படம். அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘வா டீல்’ என்ற படத்தில் நடிக்க அரம்பித்தார்.


அதற்குள் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர, ‘வா டீல்’ படத்தை ஒத்தி வைத்திருந்தார். அருண்விஜய்யின் 20 வருட உழைப்பிற்கு பலனாக ‘என்னை அறிந்தால்’ படத்தின் ‘விக்டர்’ கேரக்டர் அவருக்கு நல்ல பெயரைத் தேடித் தந்திருக்கிறது.


வில்லனாக நடித்ததன் மூலம் நிறைய ரசிகர்களை சம்பாதித்ததார் அருண் விஜய்.அதில் அச்சர்யம் என்னவென்றால்… அஜித்தின் ரசிகர்களே அருண் விஜய்யின் ரசிகர்களாகவும் மாறியதுதான்.!


தற்போது தன் அடுத்த படமான ‘வா டீல்’ வேலையில் பிசியாகிவிட்டார் அருண் விஜய். ரத்னசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர் நடித்திருக்கும் ‘வா டீல்’ படத்தின் first look தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் அஜித்தின் ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அருண் விஜய்யின் வா டீல் படத்துக்காக, #VaaDeal  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரென்ட் செய்துள்ளனர்.


அஜித் ரசிகர்களால் பலன் அடைந்த நடிகர் யாரென்றால்… அருண்விஜய்தான்.

=== CASTRO RAHUL ===

15,284 Views

கதாநாயகி நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விட்டால் வெளிநாட்டு தொழில் அதிபரை கல்யாணம் செய்து கொண்டு திரையுலகைவிட்டு காணாமலே போய்விடுவார்கள். அல்லது அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.


வேறு சிலர் ‘தொழில்‘ அதிபர்களாகி காசு பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். முன்னாள் கனவுக்கன்னியான சிம்ரனோ.. திருமணத்துக்குப் பிறகு நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.


இரண்டாவது இன்னிங்ஸில் நடிகையாய் அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லை.எனவே தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன்.


‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.


“ எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. நான் நடிகையாக இருந்த அனுபவமும் எனது சின்னத்திரை நிகழ்ச்சிககளை தயாரித்த அனுபவமும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது.


என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது. சினிமாவின் மீது எனக்கிருக்கும் ஆர்வமே என்னை படங்கள் தயாரிக்கவும் மற்றும் இயக்கவும் உந்துதலாய் உள்ளது.

சினிமாவின் தரத்தை அடுத்த இடத்திற்கு முன்னேற்ற புது புது திறமைகள் அறிமுகப்படுத்த வேண்டியிருப்பதை உணர்கிறேன்.”

என்று சொல்கிறார் சிம்ரன்.


=== CASTRO RAHUL ===

4,240 Views

சினிமாவில் மார்க்கெட் இருந்தால்தான் மரியாதை. மார்க்கெட் போய்விட்டால் லைட்மேன் கூட சீண்ட மாட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தார் பரத்.


காதல், வெயில் போன்ற படங்கள் வெற்றியடைந்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தாலும் பின்னர் நடித்த படங்கள் அவருக்கு பெயர் வாங்கித்தரவில்லை.

அதனால் பரத் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான 555, கில்லாடி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஆகிய படங்களும் தோல்வியடைந்ததால் அவரது நட்சத்திர நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டது.


இந்நிலையில், பரத்தின் சகோதரி எஸ்.பிரீத்திக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.தன் தங்கையின் திருமணத்துக்கு திரையுலகில் உள்ள பலரையும் அழைத்திருந்தார் பரத்.


தனக்கு நண்பர்களாக இருக்கும் சக ஹீரோக்களையும் தானே நேரில் சென்று அழைத்திருந்தார்.பரத்தின் தங்கை திருமண வரவேற்புக்கு ஆர்.சரத்குமார், விஷால் தவிர முன்னணி நடிகர்கள் வேறு யாரும் வரவில்லை.


இதில் கொடுமை என்ன தெரியுமா? சென்னை ரினோஸ் கிரிக்கெட் அணியில் பரத்துடன் கிரிக்கெட் விளையாடும் ஹீரோக்கள் கூட வரவில்லை.

சினிமா நட்பின் லட்சணம் இதுதான்…

=== CASTRO RAHUL ===

59,782 Views

‘ஏம்ப்பா… ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தி வைக்கறது தப்பா?’ என்கிற அளவுக்கு தாறுமாறாக டென்ஷன் ஆகிக் கிடக்கிறார் அந்த புதிய இயக்குனர். இவர் புதிதாக துவங்கியிருக்கும் படத்தில் ஒரு புதுமுகத்தை ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். Office ல் சின்ன அளவில் போடப்பட்டது பூஜை.


தனது சிஷ்யனை வாழ்த்துவதற்காக வந்திருந்தார் அந்த பிரபல எடிட்டர். குருநாதரின் ஆசியை ஏக போகத்தில் அனுபவித்த அறிமுக இயக்குனர், மரியாதை கலந்த அன்போடு, ‘சார்… இதுதான் நம்ம படத்து ஹீரோயின். பெயர் தக்சா’ என்று ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி வைக்க, ஒரு வணக்கத்தை வைத்த பின் பரஸ்பரம் செல்போன் எண்களை மாற்றிக் கொண்டார்கள் இருவரும்.


அதற்கப்புறம் அங்கிருந்து கிளம்பிப் போன எடிட்டர் அன்று மாலையே நடிகைக்கு போன் அடித்துவிட்டார். ‘உங்களை பார்த்ததிலிருந்தே நான் கொஞ்சம் டிஸ்ட்ரப் ஆகிட்டேன்’ என்று ஆரம்பித்து அந்த அறிமுக நடிகையின் அழகை வர்ணிக்க, எதிர்முனை உஷாராகி விட்டது.

மோர் பானையை மூடி வைக்கலேன்னா, போற வர்ற பூனையெல்லாம் நாக்கை போடத்தானே செய்யும் என்பதை சட்டென்று உணர்ந்ததால், தனது செல்போன் பேச்சை அவசரம் அவசரமாக கட் பண்ணி தொடர் வர்ணனையை தவிர்த்தார்.

அதற்கப்புறம் நடந்ததுதான் இறைவன் போட்ட முடிச்சு போலும். அதே பெண் வேறொரு கன்னட படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே படத்தை தமிழிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘ஒரு மெல்லிய கோடு’. இசை இளையராஜா. எதார்த்தமாக பெங்களூர் போன அந்த எடிட்டர், அங்கு நடக்கும் இந்த ஷுட்டிங்குக்கு வேறு ஏதோ வேலையாக சென்றாராம். பார்த்தால், தனது மனம் கவர்ந்த அதே ஹீரோயின் அங்கே.

அட…இதென்னடா மயில்தோகை கிடைக்குமான்னு பார்க்கப் போனா, மயிலே கிடைக்குதே என்று மனம் மகிழ்ந்து ஸ்பொட்டிலேயே வைத்து, தான் அந்த பெண்ணால் கவிழ்க்கப்பட்டு கன்னாபின்னா காதலோடு திரிவதை சொல்லிவிட்டார். இதையெல்லாம் எதிர்பார்க்காத தக்சா,

உடனே ஒருவருக்கு போன் அடித்தார். அது யாராக இருக்கும்? இவரை அறிமுகப்படுத்தி வைத்தாரே, ஒரு அறிமுக இயக்குனர். அவருக்குதான். ‘என்ன சார்… இப்படியொரு ஆளை அறிமுகப்படுத்தி வச்சுட்டீங்க. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு. ப்ளீஸ் நீங்களாவது சொல்லி அவரை ஆஃப் பண்ணுங்க’ என்றார்.

குருநாதர் முகத்தை பார்த்து இந்த விஷயத்தை எப்படி சொல்வது? தவியாக தவிக்கிறார் அந்த இயக்குனர். 


=== CASTRO RAHUL ===


2,484 Views
[1]      «      1704   |   1705   |   1706      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top