துல்கர் சல்மானை தமிழுக்கு கொண்டுவந்தார்கள் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலமாய்!
ஆனாலும், அந்தப்படம் கொஞ்சம் ஏமாற்றி விட்டது. துல்கர் சல்மானுக்கு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்க அந்தப்படம் தவறி விட்டது. ஆனாலும், மீண்டும் நல்ல இடத்தைப் பெற்றுக் கொடுக்க இயக்குனர் மணிரத்னம் முடிவெடுத்துள்ளார். இதன் மூலமாக, OK கண்மணி படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும், மணிரத்னமும் இணைந்து ஒரு மறக்க முடியாத காதல் காவியத்தை திரையில் படைக்க தயாராகி வருகிறார்கள். இப்படத்தின் பாடல்கள் கூட அண்மையில் வெளியாகியுள்ளது. சூரியன்னும் முந்திக் கொண்டு முழுமையான பாடல்களை உங்களுக்கு தந்திருந்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
இந்நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகை நித்யாமேனன் முத்தக் காட்சியில் நடித்துள்ளதாக அண்மையில் செய்திகள் கசிந்துள்ளது. அவர் சம்மதிப்பாரா என்பது ஒரு புறம் கேள்வியாக எழுப்பப்பட்டாலும், மணிரத்னம் சம்மதிக்க வைத்திருப்பார் என பரவலாக பேசப்படுகிறது.
துல்கர் சல்மானும், நித்யாமேனனும் முத்தக் காட்சியிலும், இன்னும் நெருக்கமாக காதல் காட்சிகளிலும் கலக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, படம் வரட்டும். உண்மையா பொய்யா என அறிந்து கொள்ளுவோம். ஆனாலும், எதிர்பார்ப்பை வைத்துக் கொள்ளுங்கள்.
-கோடம்பாக்கக் குருவி-