‘சும்மா பார்த்தாலே பணம் தர்றீயா?’ என்பதை போல பார்க்க பழகிய சினிமாவுலகத்தில், படமே நடித்து முடித்த பிறகும் சம்பளத்தை பற்றி அதிகம் பிரஷர் கொடுக்காமல் ஒரு ஹீரோ இருப்பதை என்னவென்று புகழ்வது?
இத்தனைக்கும் அவர் Top ten வரிசையில் முக்கியமான ஹீரோ. மார்க்கெட்டில் இரண்டு கோடி அல்லது அதற்கும் மேல் என்று சம்பளம் வாங்கும் அவருக்கு இந்த படத்தில் அவ்வளவு பெரிய சம்பளமும் இல்லை. ஏன்? சுற்றி வளைத்து சஸ்பென்ஸ் கொடுப்பானேன்? விஜய் சேதுபதிதான் அவர்.
சம்பளத்தை வெகுவாக குறைத்துக் கொண்ட படம் இடம் பொருள் ஏவல். ஏன் குறைத்துக் கொண்டார் தெரியுமா? தென்மேற்கு பருவக்காற்று மூலம் இவரை அறிமுகப்படுத்தியதே இடம் பொருள் ஏவல் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமிதானே!
திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை உலகம் முழுக்க வெளியிடப் போவது உதயநிதியின் ரெட் ஜயன்ட் மூவிஸ் நிறுவனம். இவ்வளவு இருந்தும், விஜய் சேதுபதிக்கு சம்பளம் பெருமளவு செட்டில் செய்யப்படாமல் இருக்கிறதாம்.
அடுத்த மாதத்தில் படத்தை வெளியிடப் போகிறார்கள். இறுதி கட்டத்தில் இருக்கிறது வேலைகள். அதனால் கடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதியை டப்பிங் பேசுவதற்காக அழைக்கிறார்களாம்.
‘கண்டிப்பா வர்றேன். ஆனால் மனிதாபிமானத்தோட நடப்பதற்கு நீங்களும் முன் வரணும் இல்லையா? என் சம்பளத்தில் அட்லீஸ்ட் பத்து லட்சமாவது கொடுங்க. வர்றேன்’ என்கிறாராம் விஜய் சேதுபதி.
வேறொரு ஹீரோவா இருந்தா, முழுசா எண்ணி வைங்க. வர்றேன் என்பார். இவர் கேட்பதோ அவருக்கு தருவதாக சொன்ன சம்பளத்தில் பல மடங்கு குறைவுதான். இருந்தாலும் கொடுக்க முடியலையே நிலைமை கம்பெனிக்கு. பணம் வாங்கிக் கொண்டு பேசுவாரா? அல்லது வாங்காமலேயே பேசுவாரா?
==== CASTRO RAHUL ===
10,350 Views
பூஜா குமார் அமெரிக்காவில் வாழும் தமிழச்சி. ஆனால் தமிழ் பேச தெரியாது. படிக்கத் தெரியாது என்பது வேறு விஷயம். இவரை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து நிரந்தர இடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது கமல்ஹாசன்.
விரைவில் வெளிவர இருக்கும் ‘உத்தமவில்லன் ’ படத்தையும் சேர்த்து கமல் பூஜாகுமார் இணைந்து நடித்த படங்களை கணக்கிட்டால், இது மூன்றாவது படம்.
ஒரே ஹீரோயின் ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து நடித்தால் கிசுகிசு வருமல்லவா? ஆனால் கமல் அந்த வயசை தாண்டிவிட்டதால் தப்பித்தார் பூஜா குமார். ஆனால் தொடர்ந்து கமல் படங்களில் மட்டும்தான் நடிப்பீர்களா என்ற கேள்வி எழாமலிருக்குமா? எழுந்தது.
சமீபத்தில் சென்னைக்கு வந்த பூஜா குமாரிடம் இது பற்றியும் கேள்வியும் எழுப்பப்பட்டது. நானா வேற ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன்னு சொல்றேன். வேற ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன் என்று இந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அவர்.
விஸ்வரூபம் படம் வெளியான நேரத்தில் எழுந்த சர்ச்சைகளும், கமலுடன் ஹெலிகாப்டரில் ஏறி ஒரே நாளில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, சென்னை என்று மூன்று ஏரியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளையும் அவ்வளவு எளிதில் மறப்பதாக இல்லை பூஜா.
கமல்னா எல்லாத்துலேயும் ஸ்பெஷல். இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் தமிழ் நாட்ல யாராவது செஞ்சுருக்காங்களா என்று கேட்டேன். இல்லையென்றுதான் பதில் சொன்னார்கள். இந்த உத்தமவில்லன் படம் வெளியாகிற நேரத்திலும் கமல் ஏதாவது மேஜிக் செய்வார் என்கிறார் பூஜா.
அப்புறம்? இவ்வளவு ஸ்பெஷலாக கமலுடன் தொடர்ந்து நடிக்கும் பூஜாகுமார், சம்பந்தப்பட்ட படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது அந்த கொண்டாட்டத்தை இங்கிருந்து ரசிப்பதுதானே முறை? அமெரிக்காவுக்கு ஓடிவிடுகிறார். இந்த முறையாவது சென்னையில் இருந்து உத்தமவில்லனை அவர் ரசிப்பாரா? பார்க்கலாம்.
=== CASTRO RAHUL ===
5,508 Views
நம்ம தமிழ் சினிமாவில், கோழி முட்டை கன்னழகியாய் நம் அனைவரையும் இரசிக்க வைத்துள்ளவர் நடிகை பிந்து மாதவி. அவருக்கென்று நிறைய இரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார். நல்ல நடிப்பும் ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் கொண்டவர் பிந்து மாதவி.
இவர், வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் ‘கலக்குற மாப்ளே’, ‘சவாலே சமாளி’ என பல படங்களில் நடித்து வருகிறார். அத்தோடு அஜித்தின் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், பிந்து மாதவிக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்கையில், அடிபட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கதை பரவ, அனைவரும் அதற்காக அனைவரும் வேண்டுதல்களை சொல்லி பதிவுகளை இட ஆரம்பித்துள்ளார்கள். இதனால், கடுப்பான பிந்து மாதவி, அய்யா சாமிகளே, என்னை அவ்வளவு சீக்கிரத்தில சாகடிச்சிட்டாதீங்க.. எனக்கு ஒன்னும் ஆகலை. நான் நல்லாத்தான் இருக்கிறன்.தயவு செய்து இப்போவே சாவடிச்சிடாதீங்க என்று கூறியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-
6,305 Views
தமிழ் சினிமாவின் இப்போதைய பேய் படம் தான். பீட்ஸா , யாமிருக்க பயமேன், காஞ்சனா போன்ற படங்களின் இமாலய வெற்றி தான் இந்த பேய் படங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
பேய்கள் என்றாலே பெண்கள் தான் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டனர். அதனால் என்னவோ தற்போது வரவிருக்கும் பேய் படங்களில் கூட முன்னணி கதாநாயகிகள் பேய்களாக உருவெடுத்துள்ளனர். இளமை கொஞ்சும் அழகோடு வந்தவர்களை, இனி அகோரிகளாக பார்க்கப் போகிறோம்.
அந்த வகையில் மாயா என்ற பேய் படத்தில் நயன்தாராவும், பெயரிடப்படாத ஒரு பேய் படத்தில் த்ரிஷாவும், சௌர்கார்பேட்டை படத்தில் அருந்ததியும், லட்சுமி ராயும் பேய்களாக வந்து பயமுறுத்தப் போகிறார்கள்.
-கோடம்பாக்கக் குருவி-
5,937 Views
மிக நீண்ட இடைவெளியின் பின் தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மீண்டும் திரைக்கு வந்தார் அருண் விஜய், தலக்கு வில்லனாக வருவது அருணுக்கு கொஞ்சம் சவாலானதாக இருந்தது. தல இரசிகர்கள் தன்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என பயந்த அருணுக்கு, இரசிகர்களினால் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் பலரை கவர்ந்தார் அருண் விஜய்.
இப்போது கதாநாயகனாக நடித்திருக்கும் "வா டீல்" படத்தின் first look வெளிவந்துள்ளது இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நடித்திருக்கிறார். மேலும் வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளிவர தயாராக உள்ளது.
வா டீல் படத்தின் first look வெளிவந்தவுடன் தல இரசிகர்கள் அதை டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கியுள்ளனர். அதில் குஷியான அருண் விஜய் அவர்களுக்கு டிவிட் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது முதல் நாள் முதட்காட்சியையும் பார்க்கப்போவதாக தல இரசிகர்கள் டிவிட் செய்துள்ளனர் குஷியில் அருண் விஜை.
-வர்ஷி-
5,609 Views
வந்த வேகத்தில் கார்த்தியோடு அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். படங்களும் நல்ல வரவேற்பை இரசிகர்களிடம் பெற்றுக் கொள்ள, தமன்னாவின் மனதிலும் ஆசைகள் துளிர்த்தன எனலாம். அதே ஆசைகள் கார்த்தியிலும் பற்றிக் கொள்ள, இருவரும் கலந்துருகி காதலிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனாலும், என்ன ஆனதோ? கார்த்திக்கு மணப்பெண் அவசரமாக பார்க்கப்பட்டு, திருமண பந்தத்தில் இணைத்து வைக்கப்பட்டார். தமன்னா புலம்பினார். என்னை ஏமாற்றிவிட்டார் கார்த்தி என்று!
காலம் கடந்தாயிற்றே, இனிமேல் இவர் பக்கம் தலைவைத்தே தூங்க மாட்டேன் என, காரத்தை தொடர்பான விடயங்களை எல்லாம் இல்லாது அழித்தார் இந்த மாநிற அழகி தமன்னா. இந்நிலையில், இப்பொழுது கிடைத்த தகவலின் அடிப்படையி, இந்த இரண்டு ஜோடியும் மீண்டும் இணையவுள்ளனர்.
ஆஹா ... அப்படியா? பலரும் ஆச்சர்யப்படுவது புரிகிறது. ஆமாங்க, நாகர்ஜுன் கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் தான் அம்மணி கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-
4,645 Views
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வளர்ந்து வரும் தெலுங்குப் படான ஸ்ரீமந்துடு படத்தில் ஸ்ருதி மற்றும் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார்கள். இருவரும் இந்தப் படத்தில் மிக தாராளமாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. படக்குழுவும் திகைப்பில் ஆழ்ந்துள்ளது. அடடா, படம் வெளியாக முன்னமே இப்படியான புகைப்படங்கள் வந்தால் படத்தின் பெயர் மழுங்கிக் போய்விடுமே என அவர்களுக்கு திகைப்பு.
சரி, புகைப்படம் அந்தப்படம் இந்தப்படம் என்கிறீங்களே, அப்பிடி என்ன படமா...? பரபரப்பா இருக்குய்யா, தயவு செய்து சொல்லுய்யா... இப்படி பலர் பார்த்து முறைக்கிறது புரியுது.
அதாவது, இந்தப் படத்தில் மகேஷ்பாபுவும் ஸ்ருதியும் தோன்றும் ஒரு காட்சி சம்மந்தப்பட்ட புகைப்படங்களை யாரோ ஒருவர் இணையத்தில் பரப்பிவிட, அவை இப்பொழுது பலராலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதனால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என கூறப்படுகிறது.
இதுதானா? ஹீ ஹீ ஹீஎ
எப்புடு, நாங்களும் பரபரப்பை பத்த வைப்பமுல்ல !!
-கோடம்பாக்கக் குருவி-
10,069 Views
சூர்யாவின் அடுத்த படமும் ரெடி .....இப்போது வெங்கட் பிரபுவோடு மாஸ் காட்டுகிறார் . முடியும் தருவாயில் இப்போது மாஸ். இதற்கு அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பரவலான எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது .
அதற்கும் விடை கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தமிழில் யாவரும் நலம் என்ற படத்தை இயக்கிய விக்ரம் குமார் 6 ஆண்டுகள் கழித்து தமிழில் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறாராம் சூர்யா
படத்துக்கு 24 என்று இப்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக முப்பையில் பல கோடி ரூபாவில் செட்டும் போட்டாகிவிட்டதாம் .....
மாஸ் முடிந்த சூட்டோடு 24ல் சூர்யா !!
-கந்தப்பன் பிரஷாந்த்-
2,713 Views
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடிக்கிறார். இது பழைய செய்தி ..புலி முடிந்ததும் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் G .வ பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டதாக ஒரு கூடுதல் கொசுறு தகவல் .
இந்த படம் முடிந்ததும் சசிக்கும் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று இப்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது ...அனேகமாக இந்த கதை மதுரையை பின்னணியாக கொண்ட கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
.இப்போது பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் பிஸி. அட்லி படம் முடிந்து விஜய் free ஆகும்போதும் பாலாவின் படம் முடிந்து சசிகுமார் free ஆகும்போதும் இருவரும் சேருவர் என்கிறது கோடம்பாக்கம் ...ஆக காரமான கதை விஜய்க்கு ரெடி !!
-கந்தப்பன் பிரஷாந்த்-
6,057 Views
லொள்ளு நடிகர் விமல் மற்றும் சமுத்திரகனி இணைந்து நடித்து வரும் படம் நீயெல்லாம் நல்லா வருடா. நீண்ட நாட்களாக தயாராகி வந்த இப்படம், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் தலைப்பை காவல் என்று மாற்றியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தின் முதல் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
ஆனாலும், பலர் இந்தப் படத்தின் தலைப்பு அவளவு ன்றாக இல்லை எனவும், முடிந்தால் மாற்றி வையுங்கள் என வேண்டிக்கொண்டதன் பிரகாரம் படத்தலைப்பு மாறியுள்ளது. காவல் என்பது கொஞ்சம் நல்லாவே இருக்கிறது போல ஒரு பீலிங்கு !!
-கோடம்பாக்கக் குருவி-
1,960 Views
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, சலீம் திரைப்படத்துக்குப் பின்னர் இந்தியா பாக்கிஸ்தான் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்புக்கள் எல்லாம் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது மனைவியின் கண்காணிப்பில் படத்தின் ஏனைய வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் ஆண்டனி அடுத்து பிச்சைக்காரன் படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே சொல்லி இருந்தார்கள். ஆனாலும் இப்பொழுது அவரது முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது. அதாவது, அவர் அருந்ததி நாயாருடன் இணைந்து செய்தான் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ள ஏனைய நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
எனவே, மிக விரைவில் செய்தான் திரைப்படத்தை இரசிகர்கள் கண்டு களிக்கலாம். இதில் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-கோடம்பாக்கக் குருவி-
2,589 Views
நடிகை மாதா மோகன்தாஸ் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்தவர் . மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே, இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். கோலிவுட் அவரை கண்டுகொள்ளாவிட்டாலும் மலையாளம் கைவிடவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்கின.
இந்நிலையில் 2வதுமுறையாக அவருக்கு புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டன. மனம் தளராமல் மீண்டும் தன்னை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டார். சிகிச்சையின் பாதிப்பால் தலைமுடி கொட்டியது. குட்டையாக வெட்டிக்கொண்டார்.
இந்நிலையிலும் மம்தாவை இயக்குனர் ஷஃபி, தான் இயக்கும் புதிய மலையாள படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். கணவரை பிரிந்துவிட்ட நிலையில், சினிமாவை மட்டுமே நம்பி இருப்பதாகவும் நோய் பாதிப்பை தாண்டி சினிமாவில் தொடர்வேன் என மம்தா நம்பிக்கையுடன் சொல்கிறார் மம்தா. இவருடைய நம்பிக்கைக்கும் நடிப்புக்கும் நிச்சயம் இடமுண்டு !
-கோடம்பாக்கக் குருவி-
2,481 Views
தனுஷ் நடிப்பில் இப்பொழுது எடுக்கபப்ட்டு வரும் படம் மாரி. விர்விருப்பாக இடம்பெற்று வரும் இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் படு வேகமாக முடிவடைந்து வருகிறது. இந்தப் படம் மிக விரைவில் வெளியாக தயாராகவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி டீமோடு இணைந்துதான் என்பது எல்லோருக்கும் தெரியும். இசையில் அனிருத்தும், தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்ஸனும் நடிக்கவுள்ளார்கள்.
சரி, இந்நிலையில் இந்தப் படத்தின் பெயரும் வேலையில்லா பட்டதாரி 2 என்பதாகத்தான் அமையுமென பலரும் எதிர்பார்க்க, அதான் இல்லைங்க எனும் வகையில் பெயர் வெளியாகியுள்ளது. அதாவது படத்துக்கு டீக்கடை ராஜா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டீக்கடை ராஜாவில், இளமையான தோற்றத்தோடு தனுஷை அவரது இரசிகர்கள் கண்டு களிக்கவுள்ளார்கள். இன்னும் தலைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மிக விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பது உண்மை.
-கோடம்பாக்கக் குருவி-
3,503 Views
வாகை சூடவா, மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன் போன்ற நல்ல படங்களில் நடித்து, தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை இனியா.
இப்பொழுது இவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகனாக ஆர்.கேயும் நாயகியாக நீது சந்திராவும் நடிக்க, நடிகையாகவே நடிக்கிறார் இனியா. அதாவது ஸ்வப்னா ப்ரியா எனும் பெயரோடு வரும் நடிகையாக வருகிறார்.
யாருடைய தனிப்பட்ட வாழ்வு இதில் படமாகிறதோ என எமக்கும் சந்தேகம் இருந்தாலும், படம் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். இனியாவுக்கு இந்தப்படம் இன்னும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கிறதா என்பத படம் வந்த பின்னர் சொல்கிறோம்.
-கோடம்பாக்கக் குருவி-
3,934 Views
கிரிக்கெட் வீரர் பிரட்லீ நடிக்கும் சினிமா ”(UNINDIAN)”
அவுஸ்ரேலியாவின் முன்னாள் புயல்வேக வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ இந்தியாவை மையப்படுத்திய (UNINDIAN) ”இந்தியன் அல்லாதவன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடபட்டு உள்ளது.
இந்த திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டது என்று சொல்லபடுகிறது. பிரட் லீ க்கு ஜோடியாக நடிகை தனிஷ்தா சட்டர்ஜி நடிக்கிறார்.
*T.T
4,484 Views