தமிழில் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக, எதோ நினைக்கிறேன் .. என பாடியபடி அறிமுகமானவர் நடிகை ஜோதிர்மயி. இவர் தாய்மொழி மலையாளம் என்றாலும், தமிழ் குறிப்பிடும்படியாக சில படங்களில் நடித்துள்ளார்.
நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேஷன், பெரியார், சபரி, இதயத்திருடன், அறை என் 305இல் கடவுள் போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும், ஏனோ தமிழ் சினிமாவுக்கு இவரை அதிகமாய் பிடிக்கவில்லியா. அதனால் மீண்டும் இவரது சொந்த மண்ணுக்கு வழியனுப்பி விட்டது.
இந்நிலையில், 2004இல் நிஷாந்த் குமார் எனும் கணணி இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னரும் நடிக்க ஆரம்பித்ததினால், இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றத் தொடங்கின. இதனால் சிறிது காலத்திலேயே அவரை விவாகரத்து செய்தார்.
அந்தத் திருமணம் நிறைவு பெற, மீண்டும் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ஜோதிர்மயி. பிரபலமான மலையாள சினிமாக்களின் இயக்குனர் அமல் நீரத்தை கடந்த 4ஆம் திகதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் அம்மணி.
-கோடம்பாக்கக் குருவி-