படிக்கும் காலத்தில் எனக்கும் ஒரு பெண்ணுக்கும், அழகான காதல் மலர்ந்திருந்தது. காதல்ன்னா அப்பிடி ஒரு காதல். அல்லு அர்ஜுன் மூலமாக தான் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் உறவு ஆரம்பித்தது. நல்ல முறையாக நடந்த எமது காதலில், சில பிரச்சினைகள் வந்து அந்த காதலை முடித்துக் கொள்ளவேண்டி வந்தது. இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பிறகு, உங்களுக்கும் தெரியுமே !
எனக்கு வரும் காதல் நிலையில்லாதது அத்தோடு நிரந்தரமற்றது. இப்பொழுது தனிமை மட்டுமே எனக்கு துணையாக உள்ளது. கவலைப் படவில்லை. வாழ்க்கை போகும் போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன். இவ்வாறு சோகம் மல்க பெசியுல்லவர் யார் தெரியுமா?
நம்ம நடிகை த்ரிஷாவின் முன்னாள் (நல்ல) நண்பர் திரு ராணா அவர்கள் தான். என்ன பண்ண பாஸ்? காலம் இப்பிடித்தான். ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டே இருக்கும்.
-கோடம்பாக்கக் குருவி-