சமீபகாலமாக அனுபமா மற்றும் துருவ் விக்ரம் இருவரும் காதல் வாழ்க்கையில் பயணிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் பல கசிந்திருந்தன.
அந்த காதல் வாழ்க்கை குறித்து பேட்டியொன்றில் அனுபமா தெரிவித்த கருத்துகள் இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குறித்த பேட்டியில் அவர்; " இந்த விளக்கம் நகைச்சுவையாக இருக்கலாம்...ஆனால் எனக்கு நடந்த கொடுமை மக்களுக்குத் தெரியாதே... உங்க வாழ்க்கையில் அந்நியன் இருந்தா எப்படி இருக்கும் கொஞ்சம் நினைத்துப் பாருங்க... ஒரு நாள் ரெமோவாக இருப்பார், அப்போது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி மட்டும்தான் இருக்கும்... இப்படி ஒருவர் நமக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி பெற்ற அடுத்த நாளே அந்நியனாக மாறிடுவார்... கொடூரமான சம்பவங்கள் நடக்கும், வாழ்க்கையே நரகமாக இருக்கும்... அதற்கடுத்த நாள் அம்பியாக இருப்பார்... இனிமேல் தவறொன்றும் நடக்காது, நான் கொடூரமாக நடந்து கொள்ள மாட்டேன்... என்னை மன்னித்துவிடு, இனி எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி அழுது குழந்தையாகவே மாறிடுவார்... மீண்டும் அடுத்த நாளிலிருந்து இதே சுழற்சி தொடர்ந்துகொண்டிருக்கும்" எனக் கூறியுள்ளார்.
அந்நியன் திரைப்படத்தை ஒப்பிட்டுத் தனது காதல் வாழ்க்கையைப் பற்றி விளக்கம் கூறியதன் மூலம் இவர் உறுதியாக துருவ் விக்ரமைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறார் என இரசிகர்கள் அந்தப் பேட்டியை வைரலாக்கி வருகின்றனர்.