ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், குரோஷியா நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் ஆழம் குறைவாக இருப்பதால், நீச்சல் தெரியாதவர்களும் Snorkelling உபகரணங்களின் உதவியுடன் பாதுகாப்பாக பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் அதிகித்து வரும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்.
அந்நாட்டின் ட்ரோகிர் நகருக்கு அருகே கடலுக்குள் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இயேசுவின் சிலுவைப் பாதையை சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 4 மீட்டர் ஆழத்தில் சிற்பங்களையும், 9 மீட்டர் ஆழத்தில் பிரம்மாண்ட சிலையையும் காண முடியும் என்று கூறப்படுகிறது