பல்லாண்டு காலமாகவே எமது முன்னோர்கள் பின்பற்றும் எமக்கே உரித்தான மிகச்சிறந்த தமிழ் மருத்துவ முறைதான் சித்த மருத்துவம்.
பண்டைய கால சித்தர்கள் இயற்கையில் கிடைக்கக்கூடிய மூலிகைப் பொருட்கள், தாதுப் பொருட்கள் மற்றும் உடல் நோய்களைத் தீர்க்க உதவும் தாவர வகைகளைக் கொண்டு உருவாக்கிய சில மருத்துவக் குறிப்புகள் இதோ...
● வெள்ளரிக்காய் உண்பதால் சிறுநீர் அடைப்பு குணமாகும்.
● வாழைத்தண்டு சிறுநீர்க் கடுப்பை குணமாக்கும்.
● சுக்கு, மிளகு, எள்ளு ஆகிய மூன்றையும் சம அளவு அரைத்துச் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
● தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் அறிவுத் தெளிவு விருத்தியடையும்.
● தேங்காய்ப் பால் குடித்து வர வாய்ப்புண் குணமாகும்.
● மாதுளம் பழச்சாறு வயிற்றுக் கடுப்பைக் குணமாக்கும்.
● முருங்கைப் பூவை சமைத்துச் சாப்பிட்டால் கண் எரிச்சல் குணமாகும்.
இவை உள்ளிட்ட பல சித்த மருத்துவக் குறிப்புகளைத் தற்போதைய நவீன மருத்துவம் கூட ஏற்றுக்கொண்டுள்ளது. இவற்றை முறையாகப் பின்பற்றினால் உணவே மரு