பாரம்பரிய சமையல் முறைகளில் முக்கிய பங்குவகிக்கும் மண்பானை, உணவை மெதுவாகவும் சமமாகவும் வேக வைக்க உதவுவதால் அதன் இயல்பான சுவையும் ஈரப்பதமும் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் குறைந்த எண்ணெயிலேயே சுவையான உணவைத் தயாரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .
அதே நேரம் மண்பானையில் சமைத்தால் உணவில் அதிகளவு தாதுக்கள் சேரும் அல்லது அது அனைத்து நோய்களுக்கும் தீர்வாகும் என்ற கூற்றுக்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், ஈயம் போன்ற நச்சுப் பொருட்கள் இல்லாத மண்பானையைப் பயன்படுத்துவது பாதுகாப்பான தீர்வாகக் கருதப்படுகிறது.
சமையல் பாத்திரம் மட்டுமல்ல சமைக்கும் முறையும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது . எனவே, சமச்சீர் உணவுப் பழக்கவழக்கத்துடன் தரமான மண்பானையில் சமைத்த உணவைத் தேர்வு செய்வது உடல் நலத்திற்கு நல்ல பழக்கமாகும்.