52 Views
குறிப்பாக, ஆபத்து ஏற்படும் போது காகங்கள் வெளியிடும் பாதுகாப்பு அழைப்புகள் உள்ளிட்ட விலங்குகளின் ஒலிகளை ஆய்வு செய்வதன் மூலம், அவை எந்த சூழ்நிலையில் எந்த வகையான தகவலை பரிமாறுகின்றன என்பதை அறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு ஒலி எப்படி இருக்கிறது என்பதை மட்டும் AI கண்டறிவது, அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டுவிட்டதாகக் கூற முடியாது என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே இருவழித் தொடர்பு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு விஞ்ஞான உலகில் அதிகரித்துள்ளது. இருப்பினும், விலங்குகளின் ஒலிகளுடன் அவற்றின் உடல் அசைவுகள், நடத்தை மற்றும் சூழலையும் இணைத்தே ஆய்வு செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். AI மூலம் விலங்குகளின் “மொழியை” புரிந்துகொள்ளும் முயற்சி இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்தாலும், இது தொழில்நுட்ப உலகில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.